Don't Miss!
- News "யாரும் ஒழுங்கா வேலை பார்க்கல.." அதிமுக நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டாரா எடப்பாடி? வெளியான பரபர தகவல்
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிம்புவின் மாநாடு கைவிடப்பட்டதா.... தயாரிப்பாளர் விளக்கம்!
சிம்புவின் மாநாடு திரைப்படம் கைவிடப்படவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
சென்னை: சிம்புவின் மாநாடு படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுத்துள்ளார்.
வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு பிறகு சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். மாநாடு என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
என்னை நடிக்க வெச்சு மோசம் பண்ணிடாங்க.... அக்னி தேவி இயக்குனர் மீது பாபி சிம்ஹா போலீசில் புகார்!
இப்படத்தின் படப்பிடிப்பு சிம்புவின் பிறந்தநாளான 3ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதன் பிறகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென சிம்பு லண்டன் கிளம்பி சென்றுவிட்டார். இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.
Request to stop the Rumours that the movie is been dropped. It is not that easy to start a movie as u stop it by your silly Rumour
— sureshkamatchi (@sureshkamatchi) March 19, 2019
We are very clear that #Maanadu is on.
Discussions and pre-production is on full swing.
Details about the movie and schedule to be revealed soon.
ஆனால் இதனை படக்குழு மறுத்துள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, "படம் கைவிடப்பட்டதாக வதந்திதகளை பரப்ப வேண்டாம். படப்பிடிப்பை தொடங்குவது என்பது சாதாரணமானது அல்ல. மாநாடு படம் திட்டமிட்டபடி எடுக்கப்படும். படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" என தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளரின் இந்த பதிவு மூலம், மாநாடு படம் கைவிடப்பட்டதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.