சேர்ந்து வாழ அஸ்வின் ரெடி: பிரிவில் குறியாக இருக்கும் சவுந்தர்யா?
சென்னை: கணவருடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்று ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா அடம் பிடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா நான்கு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த அஸ்வினை பிரிந்து வாழ்கிறார். கணவனும், மனைவியும் பிரிந்து ஓராண்டாகிவிட்டது.

இருவரும் விவாகரத்து கோர உள்ளதாக கூறப்படுகிறது. விவாகரத்து எல்லாம் வேண்டாம் ஒன்றாக சேர்ந்து வாழுங்கள் என்று பலரும் சவுந்தர்யா மற்றும் அஸ்வினுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்களாம்.
ரஜினி கூட மகள் மற்றும் மருமகனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினாராம். அஸ்வின் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ தயாராக உள்ளதாகவும், சவுந்தர்யா பிரிவதில் தீர்மானமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரிவை நோக்கி செல்லும் இந்த ஜோடிக்கு வேத் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











