Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரொம்ப அசிங்கமாகிடுச்சி.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுகிறாரா சுரேஷ்? பரபரப்பு தகவல்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறப் போகிறார் என்கிற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
சனம் ஷெட்டி தன்னை தரக்குறைவாக பேசியதால், இதுவரை இல்லாத அளவுக்குத் தானே பிக் பாஸிடம் கோரிக்கை வைத்து கன்ஃபெஷன் ரூமுக்கு சென்று முறையிட்டார்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டே சுரேஷ் வெளியேறப் போகிறார் என்கிற தகவல் தீயாக பரவி வருகிறது.
போடா வாடா என பேசிய சனம்
கேபி உள்பட ஹவுஸ்மேட்ஸ் பலரும் சுரேஷ் சக்கரவர்த்தியை தாத்தா என அழைக்கின்றனர். தாத்தா வயதில் இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தியை ஒரு அப்பா ஸ்தானத்திலாவது நினைத்து பார்த்து, கொஞ்சம் மரியாதையாக சனம் பேசியிருக்கலாம். வாடா, போடா என பெரியவரை பேசியது தவறு என்று பலரும் சனம் ஷெட்டியை திட்டி இருந்தனர்.
பிக் பாஸிடம் முறையிட்டு இருக்கலாம்
சுரேஷ் சக்கரவர்த்தி செய்தது தப்புன்னு தோன்றியிருந்தால், சனம் ஷெட்டி பிக் பாஸிடம் முறையிட்டு இருக்கலாம். அதற்கு பதிலாக, அவரே சுரேஷ் சக்கரவர்த்தை வரம்பு மீறி பேசியது மிகப்பெரிய தவறு என்றே சமூக வலைதளத்தில் சனம் ஷெட்டியை கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.
வெளியேறுகிறாரா சுரேஷ்
சனம் ஷெட்டி அப்படி பேசியதால், இனிமேலும் தான் இந்த வீட்டில் இருந்து கேம் விளையாட வேண்டும் என்கிற அவசியம் தனக்கு இல்லை என்றும், சின்னவங்க, பெரியவங்கன்னு மட்டு மரியாதை இல்லாம நடந்துக்குறாங்க, ரொம்ப அசிங்கமா ஆகிடுச்சு, நான் இந்த வீட்டில இருந்து வெளியேறுகிறேன் பிக் பாஸ் என கன்ஃபெஷன் ரூமில் அழுது புலம்பிய பிறகு சுரேஷ் சொன்னதாக பரபரப்பு தகவல்கள் கிளம்பியுள்ளன.
ஓவியாவை போலவே
பிக் பாஸ் வீட்டில் இவர் தான் வின்னர் ஆவார் என முதல் சீசனில் ஓவியாவை ரசிகர்கள் நினைத்து இருந்த நிலையில், அவருக்கு பைத்தியக்காரி பட்டம் கட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றியதை போலவே சுரேஷ் சக்கரவர்த்தியையும் வெளியேற்ற பிக் பாஸ் போட்ட பிளானா என்கிற ரீதியிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
சுசித்ரா வரவுக்காக
மேலும், இந்த வாரம் பாடகி சுசித்ரா பிக் பாஸ் வீட்டுக்கு வர உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் தான், இப்படி சனம் ஷெட்டியை தூண்டி விட்டு ஓவராக பேசி, சுரேஷ் சக்கரவர்த்தியே வேறு வழியில்லாமல் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போடப்பட்ட சூழ்ச்சி என்றும் கருத்துக்கள் பரவி வருகின்றன.
உண்மை என்ன?
இதில் எது உண்மை என்பது இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டாயம் தெரிந்து விடும். கன்ஃபெஷன் ரூமில் அழுது புலம்பிய மொட்டை தல சுரேஷ் தாத்தா பிக் பாஸ் வீட்டில் இனியும் நீடித்து ரகளை செய்வாரா? இல்லை அதிரடியாக வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.