பாட்ஷா கதையைத்தான் சூர்யாவை வைத்து எடுக்கிறாரா லிங்கு?
ரஜினி நடித்த பாட்ஷா கதையைத்தான் சூர்யாவுக்கேற்ற மாதிரி மாற்றி அஞ்சானாக எடுக்கிறார் லிங்குசாமி என்று தகவல் வெளியாகியுள்ளது.
லிங்குசாமி இயக்கி, தயாரித்து வரும் படம் அஞ்சான். சூர்யா - சமந்தா ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

வரும் ஆகஸ்டில் வெளியாகவிருக்கும் அஞ்சானின் கதை குறித்து மீடியா பரபரப்பு கிளப்ப ஆரம்பித்துள்ளது.
லிங்குசாமிக்கு ரஜினியின் பாட்ஷா படம் மீது எப்போதும் தனி ஈர்ப்பு. பல மேடைகளில், பாட்ஷா மாதிரி ஒரு ஆக்ஷன் படம் பண்ணனும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.
அஞ்சான் படத்தை சூர்யாவுக்கு ஒரு பாட்ஷா என்று சொல்லும் அளவுக்கு எடுக்க வேண்டும் என்று திட்டமிட்ட லிங்கு, கிட்டத்தட்ட பாட்ஷாவின் பாணியிலேயே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறாராம்.
அதனால்தான் படத்தின் பெரும்பகுதியை மும்பையிலேயே வைத்து எடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











