Don't Miss!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நேர்கொண்ட பார்வைக்கு நெருக்கடி.. அஜித் படத்தை கார்னர் செய்யும் தயாரிப்பாளர் சங்கம்.. காரணம் இதுவா?
நேர்கொண்ட பார்வை படத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்று கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், சேலம் ஏரியா விநியோகஸ்தர்கள் கவுன்சிலும் அவசர ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிம்பு, ஜெயம்ரவி, ராகவா லாரன்ஸ் விக்ரம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இனி சேலம் ஏரியாவில் 45 டிஜிட்டல் பிரிண்டுகள் மட்டுமே ரிலீஸ் செய்வது என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பிரிண்ட்கள்:
சேலம் ஏரியாவை பொறுத்தவரை டாப் ஹீரோக்களின் படங்கள் குறைந்தபட்சம் 65 டிஜிட்டல் பிரிண்ட்கள் ரிலீஸ் செய்யப்படும். அதாவது 65 திரையரங்குகள் அல்லது ஸ்கிரீன்களில் திரையிடப்படும். அப்போது தான் வியாபாரம் அதிகமாக நடைபெறும். இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் திடீரென இப்படியொரு நிபந்தனை விதித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
நேர்கொண்ட பார்வைக்கு பிரச்சினை:
குறிப்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த புதிய கட்டுபாடுகள் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் 8ம் தேதி வெளியாகிறது. விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால், இந்த படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த வேளையில் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அறிவிப்பு, நேர்கொண்ட பார்வை படத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலோசனை கமிட்டி:
ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தை பொறுத்தவரை தற்போது இருப்பது ஆலோசனைக் கமிட்டி மட்டுமே. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் தான் தற்போது நிர்வாகிகளாக உள்ளனர் என்பதால், அவர்கள் எடுக்கும் எந்த முடியும் யாரையும் கட்டுப்படுத்தாது என்ற பேச்சும் இருக்கிறது.
சேலம் சிண்டிகேட்:
இது ஒருபுறம் இருக்க சேலம் ஏரியாவை பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் சங்கத்தைவிட, அங்குள்ள சில முக்கிய புள்ளிகள் தான் வலுவானவர்கள் என்று கூறப்படுகிறது. அந்த சிண்டிகேட்டை உடைக்கவே தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக பேசப்படுகிறது.
8ம் தேதி தெரியும்:
ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தால் அந்த சிண்டிகேட்டை எதுவும் செய்ய முடியாது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இது எல்லாமே வரும் 8ம் தேதி தெரிந்துவிடும் என்கிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்திற்கு சேலம் ஏரியாவில் எத்தனை டிஜிட்டல் பிரிண்டுகள் போடப்படுகின்றன என்பதை பொறுத்தே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வலிமை தெரியவரும்.