சிம்பு படமும் விஜய்சேதுபதி படமும் ஒரே கதையா?
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படம் பெரும்பகுதி முடிந்து சிம்புவின் கால்ஷீட்டால் தடைபட்டு நிற்கிறது.
இன்னொரு புறம் விஜய்சேதுபதி, லட்சுமிமேனன் நடிக்க 'வா' ரத்னசிவா இயக்கும் றெக்க படம் தயாராகி வருகிறது.

இந்த இரண்டு படங்களையும் முடிச்சு போட்டு தான் ஒரு வதந்தி பரவுகிறது. இரண்டு படங்களின் கதையும் ஒன்றுதானாம். இரண்டு படங்களிலுமே நாயகன், நாயகியை ஒரு கும்பல் துரத்திக்கொண்டே இருக்குமாம். அவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை என்கிறார்கள்.
இரண்டு இயக்குநர்களும் அவரவர்கள் ஸ்டைலில் எடுக்கட்டும். பார்ப்போம்.
சரி, இது ஒண்ணும் புது கதை மாதிரி தெரியலையே? காலம் காலமா தமிழ் சினிமால பார்த்த கதைதானே?
Comments


Click it and Unblock the Notifications