Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
அரசை எதிர்த்தால் இனி விதவிதமாக ரெய்டு கன்ஃபர்ம்... பாஜக அரசின் மெஸேஜ் இதுதான்!
சென்னை: இனி அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் ரெய்டு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் பாயும் என்பதை பகிரங்கமாகவே காட்டியுள்ளது மத்திய பாஜக அரசு, விஷால் அலுவலகத்தில் நடத்தியுள்ள ஜிஎஸ்டி ரெய்டு மூலம்.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது சினிமா துறை. ஜிஎஸ்டிக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே கோலிவுட்டில் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் உள்ள விஷால், இப்போது வரை ஜிஎஸ்டியை எதிர்த்து வருகிறார். மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் சொன்ன மெர்சல் படத்துக்கும் ஆதரவு அளித்துள்ளார்.
இந்த நிலையில்தான் அவரது தயாரிப்பு அலுவலகத்துக்கு கலால் துறையிலிருந்து ஜிஎஸ்டி கண்காணிப்பு அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
அலுவலகத்தில் விஷாலோ அவரது மேலாளரோ இல்லாத நிலையில் இந்த சோதனை நடந்து வருகிறது.
அரசுகளுக்கு எதிராக திரைத் துறையினர் சொல்லும் கருத்துக்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அரசுகளுக்கு எதிரான கருத்து சொல்லும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இதை முற்றாகத் தடுக்க முயல்கின்றன மத்திய மாநில அரசுகள்.
அதற்கு ஒரு ஆயுதமாகவே இந்த ரெய்டு நடவடிக்கைகளை கையிலெடுக்கின்றன. இதற்கு முன்பு வரை இதுபோன்ற ரெய்டுகளில் ஏதாவது உண்மை இருக்கும் என நம்பினர் மக்கள். ஆனால் இன்று விஷால் அலுவலகத்தில் நடந்துள்ள ரெய்டு விஷாலை அச்சுறுத்தும் நடவடிக்கையே என நம்பத் தொடங்கிவிட்டனர்.
அடுத்து மெர்சல் தயாரிப்பாளர் தேனாண்டாள் நிறுவனம், நடிகர் விஜய் அலுவலகங்களிலும் இதே ரக ஜிஎஸ்டி ரெய்டு நடக்கும் என்று தகவல் பரவி வருகிறது.