Don't Miss!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அரசை எதிர்த்தால் இனி விதவிதமாக ரெய்டு கன்ஃபர்ம்... பாஜக அரசின் மெஸேஜ் இதுதான்!
சென்னை: இனி அரசுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் ரெய்டு உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் பாயும் என்பதை பகிரங்கமாகவே காட்டியுள்ளது மத்திய பாஜக அரசு, விஷால் அலுவலகத்தில் நடத்தியுள்ள ஜிஎஸ்டி ரெய்டு மூலம்.
பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்றவற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது சினிமா துறை. ஜிஎஸ்டிக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே கோலிவுட்டில் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் உள்ள விஷால், இப்போது வரை ஜிஎஸ்டியை எதிர்த்து வருகிறார். மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள் சொன்ன மெர்சல் படத்துக்கும் ஆதரவு அளித்துள்ளார்.
இந்த நிலையில்தான் அவரது தயாரிப்பு அலுவலகத்துக்கு கலால் துறையிலிருந்து ஜிஎஸ்டி கண்காணிப்பு அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
அலுவலகத்தில் விஷாலோ அவரது மேலாளரோ இல்லாத நிலையில் இந்த சோதனை நடந்து வருகிறது.
அரசுகளுக்கு எதிராக திரைத் துறையினர் சொல்லும் கருத்துக்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அரசுகளுக்கு எதிரான கருத்து சொல்லும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இதை முற்றாகத் தடுக்க முயல்கின்றன மத்திய மாநில அரசுகள்.
அதற்கு ஒரு ஆயுதமாகவே இந்த ரெய்டு நடவடிக்கைகளை கையிலெடுக்கின்றன. இதற்கு முன்பு வரை இதுபோன்ற ரெய்டுகளில் ஏதாவது உண்மை இருக்கும் என நம்பினர் மக்கள். ஆனால் இன்று விஷால் அலுவலகத்தில் நடந்துள்ள ரெய்டு விஷாலை அச்சுறுத்தும் நடவடிக்கையே என நம்பத் தொடங்கிவிட்டனர்.
அடுத்து மெர்சல் தயாரிப்பாளர் தேனாண்டாள் நிறுவனம், நடிகர் விஜய் அலுவலகங்களிலும் இதே ரக ஜிஎஸ்டி ரெய்டு நடக்கும் என்று தகவல் பரவி வருகிறது.
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு