Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பெருமாள் பிச்சை மகனை அடக்கப்போவது ஆறுச்'சாமி' இல்லையா?
Recommended Video
சென்னை: சாமி 2 படத்தில் பெருமாள் பிச்சை மகன் ராவண பிச்சையை அடக்கப்போவது ஆறுச்சாமி இல்லை என்று கூறப்படுகிறது.
ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் நடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. முதல் பாகத்தில் பெருமாள் பிச்சையை(கோட்டா ஸ்ரீனிவாச ராவ்) ஆறுச்சாமி(விக்ரம்) கொன்றுவிடுவார்.
இரண்டாம் பாக செட்டில் பெருமாள் பிச்சையின் 29வது நினைவு நாள் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
பாபி சிம்ஹா
பெருமாள் பிச்சையின் மகன்களாக பாபி சிம்ஹா(ராவண பிச்சை), ஜான் விஜய்(தேவேந்திர பிச்சை), ஓஏகே சுந்தர் (மகேந்திர பிச்சை) ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
விக்ரம்
29வது நினைவு நாள் என்றால் நிச்சயம் ஆறுச்சாமிக்கு வயதாகி ஓய்வு பெற்றிருப்பார். அப்படி என்றால் ஆறுச்சாமியின் மகனான மற்றொரு விக்ரம் தான் பெருமாள் பிச்சையின் மகன்களை சமாளிக்க வேண்டும்.
போலீஸ்
சாமி 2 படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் அப்பா ஆறுச்சாமி மற்றும் மகன் விக்ரம் போல. மகனுக்கு தான் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக இருக்கும்.
மாமி
சாமி 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமான த்ரிஷா பின்னர் விலகிவிட்டார். விக்ரம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டும் அவர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.