Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விமானத்திற்காக 7 மணிநேரம் காத்திருந்த இளையராஜா..என்ன காரணம் தெரியுமா?
சென்னை : இசைஞானி இளையராஜா சென்னை விமானநிலையத்தில் கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்துள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் இசையுடன் செலவழித்து தன்னை புத்துணர்வாக வைத்திருக்கிறார்.
ஆத்மார்த்தமான மெலடி, துள்ளல் என எதுவாக இருந்தாலும், இளையராஜாவின் ரசிகர்களுக்கு அவையெல்லாம் பெரும் விருந்தாக இருக்கின்றன. தன்னிகரில்லா இசை மூலம் மனித மனங்களை ஆட்சி செய்வதில் இளையராஜாவுக்கு நிகர் இளையராஜா தான்.
கையைப் பிடித்து கெஞ்சிய கோபி.. சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்த ராதிகா!
இசைஞானி இளையராஜா
1976ம் ஆண்டு காலகட்டத்தில், அன்னக்கிளி படத்தில் மச்சான பாத்தீங்களா? எனும் பாட்டு மூலம் ஒட்டுமொத்த இசையுலகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்தவர் இசைஞானி இளையராஜா. ஒவ்வொரு பாடல்களுக்கும், பின்னணி இசை மூலம் படத்திற்கும் உயிர் கொடுத்த பெருமை இவருக்கு உண்டு.
உலகம் முழுவதும் ரசிகர்கள்
இதுவரை 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பல்லாயிரம் பாடல்களுக்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. தற்போது வெற்றிமாறனின் விடுதலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இளையராஜாவுக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அவர்களுக்காக உலகம் முழுவதும் கச்சேரிகளை இளையராஜா நடத்தி வருகிறார்.
ஹங்கேரியில் கச்சேரி
இந்நிலையில், ஹங்கேரி நாட்டில் இசைக் கச்சேரி நடத்த இளையராஜா திட்டமிட்டு இருந்தார். இதற்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து ஹங்கேரிக்கு செல்ல இருந்தார் இளைஞானி. அவர் செல்ல இருந்த விமானம் அதிகாலை 2 மணிக்கு புறப்படும் என கூறப்பட்டு இருந்தது நிலையில், இன்று அதிகாலையிலேயே விமான நிலையம் வந்தார் இளையராஜா.
7 மணிநேரம் காத்திருப்பு
ஆனால் சென்னையில் நேற்றிரவு பலத்த மழை பெய்ததன் காரணமாக விமானங்கள் புறப்படுவதிலும், தரையிரங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் தரையிரங்க இருந்த விமானங்கள் சில பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. முதலில் 2 மணிநேரம் தாமதம் ஆகும் என கூறப்பட்டது.
டென்ஷனான இளையராஜா
பின்னர் ரன்வேயில் மழைநீர் தேங்கி இருப்பதால், 3 மணிநேரம் தாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மேலும் 2 மணிநேரம் தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்து7 மணிநேரத்திற்கும் மேலாக இளையராஜா ஏர்போர்ட்டில் காத்திருந்ததால் டென்ஷனா இளையராஜா பின்னர் துபாய் விமானத்தில் ஏறிச்சென்றார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!