Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பூமியை தாண்டி இனி விண்ணிலும்… இளையராஜாவின் பாடல்… இசைஞானியின் மற்றுமொரு சாதனை!
சென்னை : பூமியை தாண்டி இனி விண்ணிலும் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒலிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழனின் புகழ் விண்ணுலகம் வரை சென்றதை இளையராஜாவின் ரசிகர்கள் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் வெளியிட்ட சில நேரங்களில் சில மனிதர்கள் அட்டகாச பாடல்
இசைஞானி இளையராஜா
இசை நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. பலரின் துன்பங்களுக்கு மருந்தாக இருப்பது இசையின் நாயகன் இளையராஜாவின் இசை தான். தனிமை, அழுகை, மகிழ்ச்சி என எந்த மனநிலையில் இருந்தாலும் இவரின் இசை நம்மை வசீகரிக்கும், நம் தலைகோதும், மனதை வசப்படுத்தி கட்டி இழுக்கும் ஆற்றல்படைத்தது.
பூமியைத்தாண்டி விண்ணில்
தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த இசை பொக்கிஷமாக இளையராஜா திகழ்ந்து வருகிறார். உலகம் முழுவதிலும் இந்த இசைஞானியின் இசைக்கு அடிமையாகி கிடப்பவர்கள் பல கோடி பேர் உள்ளனர். தன் இசையால் உலகை ஆட்டிப்படைத்த இசைஞானியின் இசை இனி பூமியைத் தாண்டி விண்ணிலும் ஒலிக்க உள்ளது.
நாசாவில்
நாசா உதவியுடன் உலகின் மிக குறைவான சாட்டிலைட் ஒன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த சாட்டிலைட்டில் இசைஞானி இளையராஜாவின் பாடல் ஒலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இளையராஜாவிடம் ஒப்புதல்
இந்த சாட்டிலைட்டை தயாரிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு குழு, இந்த சாட்டிலைட் உடன் பாடல் ஒன்றை இணைக்க முடிவு செய்தது. இதனை அடுத்து அவர்கள் இசைஞானி இளையராஜாவிடம் பேசி அவரது பாடலை சாட்டிலைட்டில் ஒலிக்க ஒப்புதல் வாங்கி உள்ளதாகவும் இதனை அடுத்து விண்ணிற்கு செல்ல உள்ள சாட்டிலைட்டில் இசைஞானி இளையராஜாவின் பாடல் விரைவில் ஒலிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழனின் புகழ் விண்ணுலகம் வரை சென்றதை இளையராஜாவின் ரசிகர்கள் மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.