Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ரஜினியுடன் இளையராஜா திடீர் சந்திப்பு..ஆர்வத்தில் ரசிகர்கள்..எல்லாம் இதற்காகத்தானா?
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்தப் படத்தின் சூட்டிங்கிற்காக தற்போது காத்திருக்கிறார். இந்தப் படத்தை நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது.
இதையொட்டி சமீபத்தில் தனது மகளுடன் அமெக்காவிற்கு சென்ற ரஜினிகாந்த் தனது ரெகுலரான மெடிக்கல் செக்கப்பையும் மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்றைய தினம் இளையராஜா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ளார்.
கொடைக்கானலில் குத்தாட்டம் போட்ட வரலக்ஷ்மி சரத்குமார்.. அதிலும், அந்த கண்ணாடி மேஜிக் வேறலெவல்!
ரஜினியின் தலைவர் 169 படம்
அண்ணாத்த படத்தை அடுத்து தனது தலைவர் 169 படத்திற்கு தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். அண்ணாத்த படம் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து இயக்குநர் சிவா இயக்கத்தில் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூலில் சாதனை செய்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி
இதையடுத்து தற்போது அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் அறிவிப்பு பீஸ்ட் படத்திற்கு முன்னதாகவே மேற்கொள்ளப்பட்டது. பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை அடுத்து இந்தக் கூட்டணி முறியுமா என்று எதிர்பார்க்கப்பட்டது.
விரைவில் சூட்டிங்
ஆனால் தற்போதுவரை இந்தக் கூட்டணி தொடர்வதாகவே தெரிகிறது. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இந்நிலையில் முன்னதாக தனது மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் தனது அமெரிக்க பயணத்தை மேற்கொண்டார். இது அவரது ரெகுலர் மெடிக்கல் செக்கப்பிற்கான பயணம் என்று கூறப்பட்டுள்ளது.
ரஜினியை சந்தித்த இளையராஜா
இந்நிலையில் இன்றைய தினம் இசைஞானி இளையராஜா நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசியுள்ளனர். இதையடுத்து தனது ஸ்டூடியோவிற்கு இளையராஜா புறப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருடன் ரஜினியும் அவரது ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார்.
கோவையில் இசை நிகழ்ச்சி
வரும் ஜூன் 2ம் தேதி இளையராஜாவின் 79வது பிறந்தநாளையொட்டி கோவையில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி ரிகர்சலில் ஈடுபடவே இளையராஜா தனது ஸ்டூடியோவிற்கு சென்றுள்ளார். அவருடன் கூடவே சென்ற ரஜினி, அங்கு நடைபெற்ற ரிகர்சல்களை ஆர்வத்துடன் கண்டு களித்துள்ளார்.
ரிகர்சலை பாராட்டிய ரஜினி
மேலும் சில பாடல்களை ஆர்வமுடன் பார்த்து கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ளார். பாராட்டும் தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இரண்டு லெஜெண்ட்கள் எந்தவித பந்தாவும் இல்லாமல் மனம் திறந்து பாராட்டுக்களை பகிர்ந்து கொண்டுள்ள இந்த சம்பவம் இளம் தலைமுறை ஹீரோக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று.
புகைப்படங்கள் பகிர்வு
இந்நிலையில் இந்த நிகழ்வுகளின்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றனர். ரசிகர்கள் தொடர்ந்து இந்தப் புகைப்படங்களை ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். இளையராஜா தொடர்ந்து 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள நிலையில், அடுத்ததாக அவரது மாமனிதன் படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினியை இளையராஜா சந்தித்தது இதற்காகத்தானா?
ரஜினி இளையராஜா சினிமா உறவு நீண்டகால உறவாகும், பதினாறு வயதினிலே தொடங்கி ரஜினியின் பல ஹிட் படங்கள் இளையராஜா இசையில் வந்தது. ரஜினி இளையராஜாவை சாமி என்றும், இளையராஜா ரஜினியை சாமி என்றும் பரஸ்பரம் அழைத்துக் கொள்வார்கள். தனது பிறந்த நாளையொட்டி கோவை கொடிசியாவில் நடக்கும் பிரம்மாண்ட கச்சேரிக்கு ரஜினியை இளையராஜா தனிப்பட்ட முறையில் அழைத்திருக்கலாம் என்று தெரிகிறது. ரஜினியும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.