Don't Miss!
- News திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்குள் அந்த "சத்தம்".. கருவறை கிட்ட சேர்ல யாரு? திருவள்ளூர் கொடுமை
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
உயிர்காத்த இசைஞானியின் இசை... நெகிழ்ச்சி சம்பவத்தை பதிவிட்ட துணை நடிகர்
சென்னை : கேன்சருக்கான அறுவை சிகிச்சையின்போது இளையராஜா பாடலை பாடிய சென்னைவாசி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அந்த நோயாளியை இளையராஜா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து துணை நடிகர் ஒருவர் தனது முகநூலில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் திரைக்கதை.. அமீர் இயக்கத்தில்.. மதப் பிரச்சனையை கையில் எடுத்துள்ள இறைவன் மிகப் பெரியவன்!
அறுவை சிகிச்சையில் பாட்டு
சென்னையை சேர்ந்த சீதாலட்சுமி என்ற பெண்மணி மார்பக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையின்போது இளையராஜாவின் பாடலைப் பாடிய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து மற்றொரு நெகிழ்ச்சி சம்பவமாக இளையராஜா அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
வலியை மறக்க இளையராஜா பாட்டு
சென்னையை சேர்ந்த சீதாலட்சுமி மிகச்சிறந்த பாடகியாக இருந்த நிலையில், அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து கொடுக்க முடியாத நிலை இருந்தது. இதையடுத்து தனது வலியை மறக்க அவர் இளையராஜாவின் பாடல்களை பாடியபடி அறுவை சிகிச்சையை செய்துக் கொண்டுள்ளார்.
இளையராஜாவுடன் சந்திப்பு
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அவரையும் இளையராஜாவையும் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சம்பவம் இளையராஜாவின் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
துணை நடிகர் பாராட்டு
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கார்த்திக்ராஜா என்ற துணை நடிகர் தனது முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன் இசையால் தானே வாழ்கிறீர்கள் என்று இளையராஜா கூறியதை பலர் தலைகணம் என்றனர் ஆனால் தற்போது அது உண்மையாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜாவின் இசை முடிவிலி
சீதாலஷ்மி குறித்த சம்பவங்களை பகிர்ந்துள்ள அவர் ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் என்னும் இளையராஜாவின் இசை பாடலில் கங்கை அமரன் எழுதிய வரிகளுக்கு இந்த நிகழ்வு பொருந்தும் என்றும் ராஜாவின் இசை முடிவிலி (Infinity) என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
போனசாக சந்திப்பு
சீதாலட்சுமி தற்போது தனது சிகிச்சை முடிந்து நலமாக உள்ளார். அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து இல்லாமல் அதை எதிர்கொண்ட அவருக்கு இளையராஜாவின் இசை ஒரு போனஸ் என்றால், அவரை சந்தித்து வாழ்த்து பெற்றது கூடுதல் போனசாக அமைந்திருந்தது.
உடல்நலத்தை மேம்படுத்தும்
மருத்துவமனை நிர்வாகம் கூறியது போல, சீதாலட்சுமி மிகவும் நேசிக்கும் இளையராஜாவை நேரில் சந்தித்தது அவர் தன்னுடைய உடல்நலத்தை மேம்படுத்திக் கொள்ள பெரிதும் உதவிகரமாக அமையும். அவர் தன்னுடைய உடல்நலக் குறைவிலிருந்து விரைவில் வெளிவர இளையராஜா பாடல்களும் உதவும்.