Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
துபாய் மாப்பிள்ளையை ரகசியமாக திருமணம் செய்த சதுரங்க வேட்டை ஹீரோயின்
Recommended Video
திருவனந்தபுரம்: சதுரங்க வேட்டை படம் புகழ் இஷாரா நாயர் துபாயில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
கேரளாவை சேர்ந்தவர் இஷாரா நாயர். விதார்த் நடித்த வெண்மேகம் படம் மூலம் ஹீரோயின் ஆனார் இஷாரா. அதை தொடர்ந்து அவர் பப்பாளி படத்தில் நடித்தார்.
அந்த இரண்டு படங்களும் அவருக்கு கொடுக்கவில்லை. இதையடுத்து வெளியான சதுரங்க வேட்டை படம் தான் இஷாராவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.
துபாய்
இஷாரா துபாயில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான சாஹில் என்பவரை இந்து முறைப்படி கடந்த 18ம் தேதி ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 5 நாட்களுக்கு பிறகு தான் அனைவருக்கும் அது தெரிய வந்தது.
குடும்பம்
இஷாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு கணவருடன் துபாயில் செட்டிலாக உள்ளாராம். அவர் இப்படி ரகசிய திருமணம் செய்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வைரல்
இஷாரா நாயரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குனர்
எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்தில் நடித்த போது இயக்குனர் கெவின் ஜோசப் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இஷாரா புகார் தெரிவித்தார். காட்சிகளை இயக்குனர் மிகவும் ஆபாசமாக தன்னிடம் விளக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். பேசும் போது எல்லாம் இயக்குனர் தன்னை தொட முயன்றார் என்று அவர் கூறினார்.