Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அந்த ஹிட் படக் கதை என்னுடையது, சுட்டுட்டாங்க: பிரபல இயக்குநர் மீது ஹீரோ புகார்
சென்னை: ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் கதை தன் படத்தினுடையது போன்று உள்ளதாக நடிகர் ஜெய் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ராம் போதினேனி நடிப்பில் கடந்த 18ம் தேதி வெளியான தெலுங்கு படமான ஐஸ்மார்ட் ஷங்கர் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. படம் ரிலீஸான நான்கு நாட்களில் ரூ. 48 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்த படத்தை யாரும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டாம், கொடூர மொக்கை என்று விமசர்கர்கள் தெரிவித்தனர். ஆனால் ரசிகர்களோ எந்த விமர்சனத்தையும் பார்ப்பதாக இல்லை. தொடர்ந்து தியேட்டர்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நா 'பொம்பள பொறுக்கி'னு பேர் வாங்கிடக்கூடாதுனு கவலைப் பட்டார்: சிவக்குமார் பற்றி ரஜினி நெகிழ்ச்சி
இதெல்லாம் ஒரு படம்னு பூரி ஜெகன்நாத் எடுத்துள்ளார், மூளையை கழற்றி வைத்துவிட்டார் போன்று என்றெல்லாம் விமர்சகர்கள் லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கினார்கள். இந்நிலையில் ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் கதை சுடப்பட்டது என்று நடிகர் ஜெய் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
ரோஜாவனம் படம் மூலம் கோலிவுட் வந்த ஜெய் ஆகாஷ் என். ராதாவின் இயக்கத்தில் நான் யார் என்ற படத்தில் நடித்தார். கடந்த 2016ம் ஆண்டு வெளியான தன்னுடைய நான் யார் படத்தின் கதை போன்றே உள்ளது ஐஸ்மார்ட் ஷங்கர் என்கிறார் ஜெய் ஆகாஷ்.
இது குறித்து ஜெய் ஆகாஷ் கூறியதாவது,
நான் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் ஐஸ்மார்ட் ஷங்கர் படம் பார்த்தேன். படத்தின் மூலக்கரு மற்றும் திரைக்கதை அப்படியே என் படத்தினுடையது போன்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
அதன் பிறகு கதை விவகாரம் தொடர்பாக இயக்குநர் பூரி ஜெகன்நாத்தை தொடர்பு கொள்ள முயன்றேன். கதை தொடர்பாக அவருக்கு சில ஆவணங்களை கூட அனுப்பி வைத்தேன். ஆனால் அவரோ, அவரின் மேனேஜரோ இதை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து நான் கதை திருட்டு தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன்.
நான் என் படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளேன். ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தை பார்த்தவர்கள் எப்படி என் படத்தை பார்ப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.
இந்த புகார் குறித்து பூரி ஜெகன்நாத்தோ, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை சார்மியோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!