Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சமந்தாவுடன் அந்த காட்சிகளில் நடிப்பது கஷ்டமாக உள்ளது: கணவர் நாக சைதன்யா
Recommended Video
ஹைதராபாத்: சில காட்சிகளில் சமந்தாவுடன் சேர்ந்து நடிப்பது கஷ்டமாக உள்ளதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், அவரின் மனைவி சமந்தாவும் சேர்ந்து ஒரு தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு அவர்கள் முதல்முறையாக ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இந்நிலையில் மனைவியுடன் நடிக்கும் அனுபவம் பற்றி நாக சைதன்யா கூறியதாவது,
வீடு
நாங்கள் இருவரும் ஒரே படத்தில் நடிப்பதால் வீட்டிற்கு ஒரே நேரத்தில் திரும்பி வருகிறோம். காலையில் சமந்தா எனக்கு முன்பு சென்றுவிடுவார். செட்டில் ஒன்றாக நேரம் செலவிடுகிறோம். படத்தில் நாங்கள் எப்பொழுது பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டே இருப்போம். ஆனால் நிஜத்திலோ நாங்கள் சண்டை போட்டதே இல்லை.
சண்டை
நிஜத்தில் சண்டை போடாததால் படத்தில் சண்டக்கோழியாக நடிப்பது கொஞ்சம் கடினமாக உள்ளது. திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பதன் மூலம் பிற நடிகைகளுக்கு என் மனைவி முன் உதாரணமாக இருப்பதில் மகிழ்ச்சி. அதிர்ஷ்டவசமாக அவருக்கு சில நல்ல படங்கள் கிடைத்தன. அவரின் கதாபாத்திரங்கள் பெரிதும் பேசப்பட்டது.
வாழ்க்கை
திருமணத்திற்கு பிறகு வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சரியாக பேலன்ஸ் செய்ய முடிகிறது. எதையும் சந்திக்கும் தைரியம் உள்ளவன் நான். பார்ட்னர் வந்துள்ளதால் வாழ்க்கை சிறப்பாக உள்ளது. மற்றபடி தனிப்பட்ட முறையில் எந்த மாற்றமும் இல்லை என்றார் நாக சைதன்யா.
நடிகைகள்
திருமணம் முடிந்த உடன் தேனிலவுக்கு கூட போக முடியாத அளவுக்கு நாக சைதன்யாவும், சமந்தாவும் படங்களில் பிசியாக இருந்தனர். ஒப்புக் கொண்ட பட வேலைகளை முடித்த பிறகே தேனிலவுக்கு சென்றனர். திருமணமாகிவிட்டது என்பதால் சமந்தாவின் மார்க்கெட் சிறிதும் பாதிக்கப்படவில்லை. இதை பார்த்து பிற நடிகைகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.