Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அந்த ஹீரோ என் கெரியரை கெடுக்கல: பதறும் இளம் நடிகை
திருவனந்தபுரம்: தான் நடிகர் திலீப்பை பற்றி எதுவும் தெரிவிக்கவே இல்லை என்று நடிகை பாமா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருபவர் பாமா. கேரளாவை சேர்ந்த பாமா மலையாள படங்களில் கூடுதல் கவனம் செலுத்தினார்.
திடீர் என்று அவருக்கு பட வாய்ப்புகள் வெகுவாகக் குறையத் துவங்கியது.
நடிகர்
அண்மையில் மலையாள பத்திரிகையான வனிதாவுக்கு பாமா பேட்டி அளித்தார். தனக்கு பட வாய்ப்புகள் குறைய தான் மதிப்பு வைத்துள்ள சினிமாத் துறையை சேர்ந்த ஒருவரும் இதற்கு காரணம் என்று பாமா தெரிவித்தார்.
திலீப்
பாமா பேட்டியில் பெயரை சொல்லாமல் பேசியது நடிகர் திலீப்பை பற்றி தான். திலீப் தான் பாமாவின் சினிமா வாழ்க்கை அஸ்தமனமாக சதி செய்தது என்று ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர்.
பாமா
தான் அளித்த பேட்டியை திரித்து பேசுவதை பார்த்த பாமா ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார். பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தான் கூறிய நபர் நடிகர் திலீப் இல்லை என்று பாமா தெரிவித்துள்ளார்.
புகார்
மலையாள திரையுலகை சேர்ந்த நடிகைகள், நடிகர்கள் சிலரின் பட வாய்ப்புகளை திலீப் கெடுத்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் தான் பாமாவின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது.