Don't Miss!
- News வாக்கு பெட்டியில் தாமரை.. வாக்குச்சாவடி வாசலிலும் "தாமரைப்பூ".. குவிந்த திமுகவினர்.. புதுச்சேரி பரபர
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ செஞ்சா சரி, நான் செஞ்சா மட்டும் தப்பா?: சீறும் சமந்தா
Recommended Video
சென்னை: ஹீரோ செய்தால் சரி, ஹீரோயின் செய்தால் மட்டும் தவறா என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை சமந்தா.
ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படத்தில் சமந்தா, ராம் சரண் தேஜா வரும் முத்தக் காட்சி உள்ளது.
திருமணமான நடிகை எப்படி இவ்வாறு முத்தக் காட்சியில் நடிக்கலாம் என்று ஆளாளுக்கு சமந்தாவை விமர்சித்துள்ளனர்.
லிப் டூ லிப்
அது வெறும் கன்னத்தில் முத்தம் கொடுப்பது தான், லிப் டூ லிப் ஒன்றும் கிடையாது. இதற்கு போய் பெரிய விஷயம் போன்று பேசுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு நான் எப்படி முத்தக் காட்சியில் நடிக்கலாம் என்று கேட்கிறார்கள் என்கிறார் சமந்தா.
நடிகை
திருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடித்தால் யாராவது கேள்வி கேட்பார்களா? அப்படி இருக்கும்போது என்னை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறார்கள்? நான் பெண் என்பதாலா? என சமந்தா குமுறுகிறார்.
மாமனார்
ஊரார் தான் விமர்சிக்கிறார்கள். என் குடும்பத்தார் எனக்கு ஆதரவாக உள்ளனர். அதிலும் குறிப்பாக என் மாமனார் மிகவும் ஆதரவாக உள்ளார். அதனால் என்னால் தைரியமாக நடிக்க முடிகிறது என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
சேலை
நான் நீச்சல் உடை அணிந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதற்கும் விமர்சனம் எழுந்தது. கடற்கரையில் நீச்சல் உடை அணியாமல் சேலையா கட்ட முடியும் என்று கேட்கிறார் சமந்தா.
புகைப்படம்
மக்களின் கவனத்தை ஈர்க்க நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிடவில்லை. நான் எந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று யார் கூற வேண்டும்? நான் திருமணமானவள் என்பதால் கலாய்க்கிறார்கள். நான் எப்படி வாழ வேண்டும் என்று யாரும் சொல்லத் தேவையில்லை. நான் பயப்பட விரும்பவில்லை என்று சமந்தா கூறியுள்ளார்.