Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஹீரோ செஞ்சா சரி, நான் செஞ்சா மட்டும் தப்பா?: சீறும் சமந்தா
Recommended Video
சென்னை: ஹீரோ செய்தால் சரி, ஹீரோயின் செய்தால் மட்டும் தவறா என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை சமந்தா.
ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படத்தில் சமந்தா, ராம் சரண் தேஜா வரும் முத்தக் காட்சி உள்ளது.
திருமணமான நடிகை எப்படி இவ்வாறு முத்தக் காட்சியில் நடிக்கலாம் என்று ஆளாளுக்கு சமந்தாவை விமர்சித்துள்ளனர்.
லிப் டூ லிப்
அது வெறும் கன்னத்தில் முத்தம் கொடுப்பது தான், லிப் டூ லிப் ஒன்றும் கிடையாது. இதற்கு போய் பெரிய விஷயம் போன்று பேசுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு நான் எப்படி முத்தக் காட்சியில் நடிக்கலாம் என்று கேட்கிறார்கள் என்கிறார் சமந்தா.
நடிகை
திருமணமான நடிகர்கள் முத்தக் காட்சியில் நடித்தால் யாராவது கேள்வி கேட்பார்களா? அப்படி இருக்கும்போது என்னை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறார்கள்? நான் பெண் என்பதாலா? என சமந்தா குமுறுகிறார்.
மாமனார்
ஊரார் தான் விமர்சிக்கிறார்கள். என் குடும்பத்தார் எனக்கு ஆதரவாக உள்ளனர். அதிலும் குறிப்பாக என் மாமனார் மிகவும் ஆதரவாக உள்ளார். அதனால் என்னால் தைரியமாக நடிக்க முடிகிறது என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
சேலை
நான் நீச்சல் உடை அணிந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதற்கும் விமர்சனம் எழுந்தது. கடற்கரையில் நீச்சல் உடை அணியாமல் சேலையா கட்ட முடியும் என்று கேட்கிறார் சமந்தா.
புகைப்படம்
மக்களின் கவனத்தை ஈர்க்க நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிடவில்லை. நான் எந்த மாதிரியான புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்று யார் கூற வேண்டும்? நான் திருமணமானவள் என்பதால் கலாய்க்கிறார்கள். நான் எப்படி வாழ வேண்டும் என்று யாரும் சொல்லத் தேவையில்லை. நான் பயப்பட விரும்பவில்லை என்று சமந்தா கூறியுள்ளார்.