Don't Miss!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- News ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் ஜாமீன் வந்த நடிகர் ரூசோ தலைமறைவு.. தீவிரமாக தேடும் தனிப்படை
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனுக்கு பிறகு அகில உலக சூப்பர் ஸ்டார் தான்
Recommended Video
சென்னை: ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனுக்கு பிறகு அகில உலக சூப்பர் ஸ்டார் தான் என்ற நிலையாகியுள்ளது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை ட்விட்டரிலேயே அமோகமாக விளம்பரம் செய்தார்கள்.
பலரையும் கலாய்த்து போஸ்டர்கள் வெளியிட்டே விளம்பரம் தேடினார்கள்.
5 மணி காட்சி
சிவா படத்திற்கு காலை 5 மணி காட்சி வைத்தனர். இவர் படத்திற்கெல்லாம் 5 மணி காட்சிக்கு யார் வருவார்கள் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. காரணம் அதிகாலை காட்சியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது தான்.
கமல்
ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜித், விஜய் ஆகியோரின் படங்களுக்கு தான் காலை 5 மணி காட்சி வைப்பார்கள். சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்கு 5 மணி காட்சி வைக்கப்பட்டது.
தமிழ் படம் 2
ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனை அடுத்து சிவாவின் படத்திற்கு காலை 5 மணி காட்சி வைக்கப்பட்டுள்ளது. தனுஷின் விஐபி2 படத்திற்கும் காலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை
தங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து துணிந்து ரிஸ்க் எடுத்து 5 மணி காட்சி வைத்த தமிழ் படம் 2 குழுவுக்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.