Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனுக்கு பிறகு அகில உலக சூப்பர் ஸ்டார் தான்
Recommended Video
சென்னை: ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனுக்கு பிறகு அகில உலக சூப்பர் ஸ்டார் தான் என்ற நிலையாகியுள்ளது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை ட்விட்டரிலேயே அமோகமாக விளம்பரம் செய்தார்கள்.
பலரையும் கலாய்த்து போஸ்டர்கள் வெளியிட்டே விளம்பரம் தேடினார்கள்.
5 மணி காட்சி
சிவா படத்திற்கு காலை 5 மணி காட்சி வைத்தனர். இவர் படத்திற்கெல்லாம் 5 மணி காட்சிக்கு யார் வருவார்கள் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. காரணம் அதிகாலை காட்சியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது தான்.
கமல்
ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜித், விஜய் ஆகியோரின் படங்களுக்கு தான் காலை 5 மணி காட்சி வைப்பார்கள். சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்கு 5 மணி காட்சி வைக்கப்பட்டது.
தமிழ் படம் 2
ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனை அடுத்து சிவாவின் படத்திற்கு காலை 5 மணி காட்சி வைக்கப்பட்டுள்ளது. தனுஷின் விஐபி2 படத்திற்கும் காலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை
தங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து துணிந்து ரிஸ்க் எடுத்து 5 மணி காட்சி வைத்த தமிழ் படம் 2 குழுவுக்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.