Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனுக்கு பிறகு அகில உலக சூப்பர் ஸ்டார் தான்
Recommended Video
சென்னை: ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனுக்கு பிறகு அகில உலக சூப்பர் ஸ்டார் தான் என்ற நிலையாகியுள்ளது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை ட்விட்டரிலேயே அமோகமாக விளம்பரம் செய்தார்கள்.
பலரையும் கலாய்த்து போஸ்டர்கள் வெளியிட்டே விளம்பரம் தேடினார்கள்.
5 மணி காட்சி
சிவா படத்திற்கு காலை 5 மணி காட்சி வைத்தனர். இவர் படத்திற்கெல்லாம் 5 மணி காட்சிக்கு யார் வருவார்கள் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. காரணம் அதிகாலை காட்சியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது தான்.
கமல்
ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜித், விஜய் ஆகியோரின் படங்களுக்கு தான் காலை 5 மணி காட்சி வைப்பார்கள். சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்கு 5 மணி காட்சி வைக்கப்பட்டது.
தமிழ் படம் 2
ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனை அடுத்து சிவாவின் படத்திற்கு காலை 5 மணி காட்சி வைக்கப்பட்டுள்ளது. தனுஷின் விஐபி2 படத்திற்கும் காலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை
தங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து துணிந்து ரிஸ்க் எடுத்து 5 மணி காட்சி வைத்த தமிழ் படம் 2 குழுவுக்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.