Don't Miss!
- News ஆஹா.. திடீரென குறைந்த தங்கம் விலை.. இப்போது வாங்கலாமா? இன்னும் குறையுமா? ஆனந்த் சீனிவாசன் பளிச்
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு எச்சரிக்கை தந்த அம்பானி குடும்பம்.. மும்பை வெல்லவில்லை என்றால் கிளம்பிவிடு!
- Finance சூர்யா – தேவா: கௌதம் அதானி வெற்றிக்கு காரணமான மலாய் மகாதேவியா.. உயிர் நண்பன்..!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'அது' பிரேம்ஜி ஜாதகத்திலேயே இருக்கு: கங்கை அமரன்- எக்ஸ்க்ளூசிவ்
சென்னை: பிரேம்ஜி விரைவில் பெரிய படத்திற்கு இசையமைக்க உள்ளார். அவருக்கு மியூசிக்கில் நல்ல எதிர்காலம் உண்டு என்பது அவர் ஜாதகத்திலேயே உண்டு என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்திற்கு எக்ஸ்க்ளூசிவாக பேட்டி அளித்துள்ளார். நடிகர் சங்கத்தில் என்ன தான் நடக்கிறது என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது,
நடிகர் சங்கம்
ஏற்கனவே இருந்த பிரச்சனையை தீர்க்கிறேன் என்று சொல்லி தானே வந்தீர்கள், அப்ப ஏன் தீர்க்கவில்லை. நடிகர் சங்கத்தில் பிரச்சனையாக உள்ளது என்று சொல்லிவிட்டு வந்து ஒன்னும் செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம். தயாரிப்பாளர் சங்கத்தில் மறுபடியும் அவர்களே வந்து உட்கார்ந்துள்ளனர். இதுவும் அரசியல் கட்சி மாதிரி ஆக்குவது எனக்கு விருப்பமில்லை.
படம்
சென்னை 28-2 படத்தில் நான் நடிக்கவில்லை. நானாக வந்துவிட்டு சென்றுள்ளேன். இது போன்று படங்களில் நடிக்க நான் ரெடி. பாட, பாட்டு எழுத, நடிக்க, வேலை செய்ய தானே உள்ளோம். கடைசி வரை வேலை செய்தால் மகிழ்ச்சி.
துட்டு
சினிமாவில் நடித்தால் துட்டு வரும். அதனால் பிற வேலைகளை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு வந்து நடிக்கலாம். என்னை பிறரிடம் சிபாரிசு செய்யுங்கள். நான் கண்டிப்பாக நடிப்பேன்.
பிரேம்ஜி
பிரேம்ஜியிடம் எந்த பெண்ணை காண்பித்தாலும் பிடிக்கவில்லை என்கிறான். அவர் ஸ்டோரியே சொல்ல முடியாத ஸ்டோரியாக உள்ளது. மகாலட்சுமி மாதிரி பெண் வேண்டுமாம். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை தவறாமல் கோவிலுக்கு செல்லும் பெண் வேண்டுமாம். இந்த ஆண்டாவது செட் ஆகும் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையில் தான் கோவில், கோவிலாக சென்று கொண்டிருக்கிறேன்.
ஜாதகம்
அப்பாவுக்கு சிரமம் வைக்காத பிள்ளைகள் என் மகன்கள். நல்ல பிள்ளைகள் கிடைத்துள்ளதற்கு சந்தோஷப்படுகிறேன். பிரேம்ஜி விரைவில் பெரிய படத்திற்கு இசையமைக்க உள்ளார். அவருக்கு மியூசிக்கில் நல்ல எதிர்காலம் உண்டு என்பது அவர் ஜாதகத்திலேயே உண்டு என்றார் கங்கை அமரன்.
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!