Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆயிரத்தில் ஒருவன் 2-க்கு கண்டிப்பா கார்த்தி வேணும்... கார்த்தி இல்லாம படம் நகராது.. இயக்குனர் செல்வராகவன்
சென்னை : இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் மாஸ்டர் பீஸாக ரசிகர்களால் என்றும் கொண்டாடப்படுகிறது
அந்த வகையில் சோழ தேசத்தை பற்றி இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் இன்றும் ரசிகர்களால் பிரமிக்கும் அளவுக்கு மிகச்சிறந்த படமாக தமிழ் சினிமாவில் உள்ளது
ஆயிரத்தில் ஒருவன் பாகம்-2 முதற்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டுக்கு கண்டிப்பாக கார்த்தி வேண்டும் என செல்வராகவன் கூறியுள்ளார்.
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை துவங்கிய செல்வராகவன்... அடுத்தப்படம் கார்த்தியுடனா?
ஆண்டுகள் கழித்து கொண்டாடப்படும்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் மிக வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களை ஆச்சரியப்பட வருகிறது. குறிப்பாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ரிலீசாகும்போது சரிவர வரவேற்பு பெறவில்லை என்றாலும் சில ஆண்டுகள் கழித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
பாகுபலி அளவிற்கு ஒரு பிரமாண்ட படத்தை
கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். எந்த ஒரு நவீன டெக்னாலஜியும் இல்லாத காலத்திலேயே பாகுபலி அளவிற்கு ஒரு பிரமாண்ட படத்தை எடுத்துக் காட்டியவர் செல்வராகவன். தமிழ் சோழ தேசத்தை பற்றி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி லீட் ரோலில் நடித்திருப்பார்.
பெஞ்ச்மார்க் ஆயிரத்தில் ஒருவன்
மேலும் ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷின் இசையில் வெளியான இந்த திரைப்படம் ரிலீசான போது ரசிகர்கள் அந்த அளவுக்கு கொண்டாடவில்லை என்றாலும் பல ஆண்டுகள் கழித்து இப்போது தமிழ் சினிமாவின் பெஞ்ச்மார்க் ஆயிரத்தில் ஒருவன் தான் என ஒவ்வொரு ரசிகர்களையும் சொல்ல வைத்துள்ளது தான் இப்படத்தின் மகிமை
கண்டிப்பா கார்த்தி வேணும்
இப்போது உள்ள தலைமுறை ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி வரும் நிலையில் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 எப்போது வரும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒரு பாகம் 2 முதல்கட்ட பணிகளை தொடங்கினார். மேலும் ஆயிரத்தில் ஒருவர் பாகம் 2 ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் பேட்டியில் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாக கண்டிப்பாக கார்த்தி வேண்டும். அவர் இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2 நகராது. நான் ஏற்கனவே சோழ தேசத்தை நோக்கி பாதி தூரம் பயணம் செய்து விட்டேன். இனி உங்களை சோழ தேசத்திற்கு அழைத்துச் செல்வது தான் மீதம் உள்ளது. என சூப்பரான அப்டேட் கொடுத்துள்ளார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே