Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஜில்லாவுக்கு ஆரம்பமானது தொல்லை... ஆர்பி சவுத்ரி அலுவலகத்தில் அதிரடி ரெய்டு!
சென்னை: விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியில் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று அதிரடி ரெய்டை ஆரம்பித்துள்ளனர் வருமான வரித்துறையினர்.
ஆர்பி சவுத்ரியின் அலுவலகம் மட்டுமல்லாமல், அவரது வீடுகள், அவரது மகன்கள் நடிகர்கள் ஜீவா, ரமேஷ் (இருவரும் ஜில்லா பட இணை தயாரிப்பாளர்கள்) உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்களிலும் இந்த சோதனை தொடர்கிறது.
ஜில்லா படத்தின் விநியோக உரிமை விற்பனை சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில் சோதனை நடப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் முந்தைய படம் தலைவா வெளியாவதில் பெரிய சிக்கல் இருந்ததால், ஜில்லாவை பிரச்சினை இன்றி வெளியிட முயன்றார் ஆர்பி சவுத்ரி. இதற்காகவே படத்தில் அரசியல் வசனங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டாராம். இப்போது முதல் சிக்கல் வருமான வரி சோதனை மூலம் வந்துள்ளது. இத்தோடு முடியுமா, அரசியல் ரீதியாக சிக்கல் தொடருமா தெரியவில்லை.
அதே நேரம், பெரிய படம் ரிலீஸை நெருங்கும் சமயத்தில் இதுபோன்ற சோதனைகள் வருவது கோலிவுட்டில் வழக்கம்தான்.
தீபாவளிக்கு வெளியான ஆரம்பம், ஆல்இன்ஆல் அழகுராஜா போன்ற படங்களின் தயாரிப்பாளர்கள் அலுவலகங்கள், மற்றும் இயக்குநர் லிங்குசாமியின் அலுவலகங்களில் பெரிய ரெய்டு நடந்தது நினைவிருக்கலாம்.