Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்தீட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இயக்குனர் லிங்குசாமி வீடு மற்றும் அலுவலகத்தில் ஐடி ரெய்டு
ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து 'ரன்', 'ஜி', 'சண்டக்கோழி' பையா, உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
வளசரவாக்கத்தில் இருக்கும் லிங்குசாமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள் பற்றி இதுவரை எந்த தகவலையிலும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
லிங்குசாமி சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் உடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் லிங்குசாமி.
இந்த நிறுவனம் மூலம் 'வழக்கு எண் 18/9', 'கும்கி' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தார்.
இவர் தற்போது சூர்யா நடிப்பில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். மேலும், கமல் நடிக்கும் 'உத்தமவில்லன்', விக்ரம் பிரபு நடிக்கும் 'இவன் வேற மாதிரி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இயக்குனராக வெற்றிபெற்ற லிங்குசாமி தயாரிப்பாளராகவும் ஜெயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.