Don't Miss!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இயக்குனர் லிங்குசாமி வீடு மற்றும் அலுவலகத்தில் ஐடி ரெய்டு
ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து 'ரன்', 'ஜி', 'சண்டக்கோழி' பையா, உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
வளசரவாக்கத்தில் இருக்கும் லிங்குசாமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள் பற்றி இதுவரை எந்த தகவலையிலும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
லிங்குசாமி சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் உடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் லிங்குசாமி.
இந்த நிறுவனம் மூலம் 'வழக்கு எண் 18/9', 'கும்கி' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தார்.
இவர் தற்போது சூர்யா நடிப்பில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். மேலும், கமல் நடிக்கும் 'உத்தமவில்லன்', விக்ரம் பிரபு நடிக்கும் 'இவன் வேற மாதிரி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இயக்குனராக வெற்றிபெற்ற லிங்குசாமி தயாரிப்பாளராகவும் ஜெயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.