Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அன்புச்செழியன் உள்ளிட்ட திரையுலகினரிடம் ஐடி ரெய்டு: ரூ.200 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு
சென்னை: அன்புச்செழியன் உள்ளிட்ட திரைத்துறையினர் வீடு அலுவலகங்களில் கடந்த 2 ஆம் தேதி முதல் ஐடி ரெய்டு நடந்து வந்தது. இதில் கணக்கில் வராத வருமானம் ரூ.200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக இந்த ரெய்டில் ரூ.26 கோடி ரொக்கப்பணம், ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கணக்கில் காட்டாமல் வருமானத்தை மறைத்தவர்களின் ரகசிய அறைகள், டிஜிட்டல் ஆவணங்கள், பிராமிசரி நோட்டுகள் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
'Victim' anthology review: ’கன்ஃபஷன்’ வெங்கட் பிரபு படம்தானா?..ஏமாற்றத்தில் ரசிகர்கள்
வருமான வரித்துறை ரெய்டு
3 நாட்களுக்கும் மேல் வருமான வரித்துறைச் சோதனை
கடந்த 2 ஆம் தேதி முதல் ஃபைனான்சியர் அன்புச்செழியன், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர் பிரபு, கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வீடு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வருமான வரி ஏய்ப்பு குறித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
அன்புச் செழியன் உள்ளிட்ட திரைத்துறையினர் வரி ஏய்ப்பு
கடந்த 2 ஆம் தேதி காலை முதல் கடந்த சில நாட்களாக ஃபைனான்சியர் அன்புச் செழியன், எஸ்.ஆர்.பிரபு, கலைப்புலி தாணு, ஞானவேல் ராஜா, சத்ய ஜோதி தியாகராஜன், 2டி லட்சுமணன் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் இல்லங்கள், அலுவலகம் என சென்னை, கோவை, மதுரை, வேலூரில் 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ.200 கோடி மதிப்பிலான வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.26 கோடி ரொக்கப்பணம், ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ரகசிய அறைகள், டிஜிட்டல் ஆவணங்கள்
இதுதவிர ரகசிய இடத்தில் ஆவணங்கள், ரகசிய அறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்தது குறித்த ஆவணங்கள், பிராமிசரி நோட்டுகள், அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் கணக்கில் காட்டாமல் மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானத்தை மறைக்க கூட்டு செயல்பாடு
திரைத்துறையில் டிக்கெட் மூலம் வரும் வருமானத்தை மறைத்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட வருமானத்தை மறைக்க கூட்டாக முயன்றுள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர டிஜிட்டல் ஆவணங்கள், முக்கிய ஆவணங்கள், லேப்டாப்கள், பென் டிரைவ்கள் என வருமானத்தை மறைத்தது குறித்த பல ஆவணங்களை வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது.