Don't Miss!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மன்னிக்கவே முடியாது.. மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் மரணிக்கும் அவலம்.. பிரபல நடிகை விளாசல்!
மும்பை: பாலிவுட் நடிகர் அனுபம் கெரை தொடர்ந்து மத்திய அரசை விளாசித் தள்ளி உள்ளார் நடிகை அமைரா தஸ்தூர்.
கடந்த ஆண்டே கொரோனா பாதிப்பை சந்தித்த நிலையில், உரிய மருத்துவ வசதிகள் இன்றி மக்கள் கொத்து கொத்தாக மடிவதை பார்க்க முடியவில்லை.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட… கர்ணன் பட வில்லன் !
மருத்துவத் துறையில் உரிய வளர்ச்சியை செய்யாமல் இந்த பேரிழப்பை கொடுத்துள்ள மத்திய அரசை மன்னிக்கவே முடியாது என நடிகை அமைரா தஸ்தூர் விளாசித் தள்ளி இருக்கிறார்.
அனுபம் கெர் விமர்சனம்
மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்கும் பணியில் சறுக்கி விட்டதாக பிரபல பாலிவுட் நடிகரும் பாஜக ஆதரவாளருமான அனுபம் கெர் மத்திய அரசுக்கு எதிராக வைத்த விமர்சனம் நாடு முழுவதும் அதிர்வலையை உண்டாக்கியது. கங்கையில் மிதக்கும் சடலங்களை நாய்கள் தின்னும் அவலம் குறித்தும் அவர் சாடியிருந்தார்.
மன்னிக்கவே முடியாது
நடிகர் அனுபம் கெரை தொடர்ந்து மத்திய அரசின் மருத்துவ துறையின் அலட்சிய போக்கை மன்னிக்கவே முடியாது என நடிகை அமைரா தஸ்தூர் விளாசித் தள்ளி உள்ளார். "It's Unforgivable" என கடுமையாக சாடியுள்ளார் அனேகன் படத்தின் நாயகி.
ஒரு வருடமாக
கடந்த ஆண்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டோம், ஒரு வருடன் ஆன பின்னரும் இந்த ஆண்டு அதை விட கொடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். நாட்டு மக்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்காமல் நாள் தோறும் 4000 மக்கள் இறப்பதை அரசு எப்படித்தான் வேடிக்கை பார்க்கிறோதே என்ற கேள்வி எழுந்துள்ளது.
சரியான திட்டமிடலே இல்லை
நாட்டில் அனைவருக்கும் சரியான மருத்துவ வசதி என்றும், கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தப்பிக்க போதுமான மருத்துவ படுக்கைகள், ஆக்ஸிஜன், மருத்துவமனைகள் கிடைக்காமலேயே பலரும் மரணித்து வருவதாகவும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்குமான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் துளியும் அக்கறை இல்லாமல் அரசு காட்டிய மெத்தன போக்கே இந்த நிலைமைக்கு காரணம். இதை ஒரு போதும் மன்னிக்கவே முடியாது என அவர் கூறியுள்ளார்.
மீண்டும் தமிழில்
பாலிவுட் நடிகையான அமைரா தஸ்தூர், ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்தில் நடித்துள்ளார். தனுஷின் அனேகன் படத்தில் நடித்துள்ள இவர் மீண்டும் தற்போது பிரபுதேவாவின் பஹீரா படம் மூலம் தமிழுக்கு வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக மருத்துவ உதவிகளை செய்து வருகிறார் அமைரா தஸ்தூர்.