Don't Miss!
- News மோடிக்கு தமிழ்ப் பற்று வந்தது எப்படி? பாரிவேந்தர் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே மாபெரும் சாதனை வெற்றி.. ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்கில் புதிய ரெக்கார்டு
- Technology மாஸ் காட்டிய Portronics.. ரூ.1500 விலை.. யாரும் பார்த்திடாத புது டிசைன்.. புது வகை இயர்போன்ஸ்.. என்ன மாடல்?
- Lifestyle வெங்காயம் தக்காளி இல்லாமலே கார சட்னியை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
மன்னிக்கவே முடியாது.. மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் மரணிக்கும் அவலம்.. பிரபல நடிகை விளாசல்!
மும்பை: பாலிவுட் நடிகர் அனுபம் கெரை தொடர்ந்து மத்திய அரசை விளாசித் தள்ளி உள்ளார் நடிகை அமைரா தஸ்தூர்.
கடந்த ஆண்டே கொரோனா பாதிப்பை சந்தித்த நிலையில், உரிய மருத்துவ வசதிகள் இன்றி மக்கள் கொத்து கொத்தாக மடிவதை பார்க்க முடியவில்லை.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட… கர்ணன் பட வில்லன் !
மருத்துவத் துறையில் உரிய வளர்ச்சியை செய்யாமல் இந்த பேரிழப்பை கொடுத்துள்ள மத்திய அரசை மன்னிக்கவே முடியாது என நடிகை அமைரா தஸ்தூர் விளாசித் தள்ளி இருக்கிறார்.
அனுபம் கெர் விமர்சனம்
மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்கும் பணியில் சறுக்கி விட்டதாக பிரபல பாலிவுட் நடிகரும் பாஜக ஆதரவாளருமான அனுபம் கெர் மத்திய அரசுக்கு எதிராக வைத்த விமர்சனம் நாடு முழுவதும் அதிர்வலையை உண்டாக்கியது. கங்கையில் மிதக்கும் சடலங்களை நாய்கள் தின்னும் அவலம் குறித்தும் அவர் சாடியிருந்தார்.
மன்னிக்கவே முடியாது
நடிகர் அனுபம் கெரை தொடர்ந்து மத்திய அரசின் மருத்துவ துறையின் அலட்சிய போக்கை மன்னிக்கவே முடியாது என நடிகை அமைரா தஸ்தூர் விளாசித் தள்ளி உள்ளார். "It's Unforgivable" என கடுமையாக சாடியுள்ளார் அனேகன் படத்தின் நாயகி.
ஒரு வருடமாக
கடந்த ஆண்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டோம், ஒரு வருடன் ஆன பின்னரும் இந்த ஆண்டு அதை விட கொடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். நாட்டு மக்களுக்கு சரியான மருத்துவ வசதி கிடைக்காமல் நாள் தோறும் 4000 மக்கள் இறப்பதை அரசு எப்படித்தான் வேடிக்கை பார்க்கிறோதே என்ற கேள்வி எழுந்துள்ளது.
சரியான திட்டமிடலே இல்லை
நாட்டில் அனைவருக்கும் சரியான மருத்துவ வசதி என்றும், கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தப்பிக்க போதுமான மருத்துவ படுக்கைகள், ஆக்ஸிஜன், மருத்துவமனைகள் கிடைக்காமலேயே பலரும் மரணித்து வருவதாகவும், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்குமான மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் துளியும் அக்கறை இல்லாமல் அரசு காட்டிய மெத்தன போக்கே இந்த நிலைமைக்கு காரணம். இதை ஒரு போதும் மன்னிக்கவே முடியாது என அவர் கூறியுள்ளார்.
மீண்டும் தமிழில்
பாலிவுட் நடிகையான அமைரா தஸ்தூர், ஜாக்கி சானின் குங்ஃபூ யோகா படத்தில் நடித்துள்ளார். தனுஷின் அனேகன் படத்தில் நடித்துள்ள இவர் மீண்டும் தற்போது பிரபுதேவாவின் பஹீரா படம் மூலம் தமிழுக்கு வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக மருத்துவ உதவிகளை செய்து வருகிறார் அமைரா தஸ்தூர்.