Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கவுதம் வாசுதேவ் மேனனுக்கு இப்போ 'தங்கமான' நேரம்!
அவர் தயாரித்துள்ள தங்க மீன்கள் படத்துக்கு கிடைக்கும் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து தரமான வித்தியாசமான கதைகளை, தகுதியான திறமையானவர்களை தேர்ந்தெடுத்து படம் இயக்கும் வாய்ப்பை வழங்கி வருகிறார்.
அப்படி உருவாகும் இரண்டாவது படம்தான் 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்'. ஹைதராபாத் நகரில் நடை பெறும் இந்த தமிழ் தெலுங்கு இரு மொழிப் படத்தை பிரபு தேவாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பிரேம் சாய் இயக்குகிறார்.
இயக்குனர் பிரேம் சாய் பற்றி தயாரிப்பாளர் கவுதம் மேனன் கூறுகையில், "பிரேம் சாய் என்னை மிகவும் கவர்ந்த திறைமையான இயக்குனர். எதையும் திட்டமிட்டு நேர்த்தியுடன் செயல்பட்டு வருகிறார்.
தெளிவான சிந்தனை, தன்னுடைய கதையின் மேல் அவர் வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கை, மற்றும் எண்ணத்தையும் எழுத்தையும் படமாக்கும் பாங்கு என்னைக் கவர்ந்துவிட்டது," என்றார்.
ஜெய் இப்படத்தில் நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக நடிக்கிறார் யாமி கவுதம். இவர்களுடன் சந்தானம், விடிவி கணேஷ், நாசர், அஷுடோஷ் ரானா மற்றும் தம்பி ராமையா நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ரஷ் பார்த்த பிரபுதேவா, உடனே யாமி கவுதமே தனது இந்திப் படத்தின் நாயகியாக்கிவிட்டாராம்.
அடுத்த மாதம் தங்கமீன்கள் வெளியாகும்போது, அத்துடன் தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் பட ட்ரைலரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.