Don't Miss!
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தண்ணி ஊற்றி ஃபைனல்ஸ் போக வேண்டாம்.. ஒரு கோடி கொடுத்தாலும் தேவையில்லை.. தன்மானத் தலைவி தாமரை!
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமரைச்செல்வி வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தாமரை எவிக்ட் ஆன தகவல்கள் கசிந்த நிலையில், அந்த காட்சியை எபிசோடில் பார்த்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தன்மானத் தலைவி, சிங்கப்பெண் தாமரை என பிக் பாஸ் ரசிகர்கள் தாமரையை கொண்டாடி வருகின்றனர்.
முதல் வார தலைவி
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் முதல் வாரத்தில் பலூன் உடைக்கும் டாஸ்க்கில் அனைவரது பலூனை காட்டான் நிரூப் கண்டபடி உடைத்து வர அவருடைய பலூனை அசால்ட்டாக உடைத்து கடைசியில் சின்னபொண்ணுவின் பலூனையும் உடைத்து முதல் வாரத்திலேயே தன்னால் விளையாட முடியும் என்பதை நிரூபித்து முதல் வார தலைவியாக மாறியவர் தாமரை.
வெளியேறிய தாமரை
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 அடுத்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், அதற்கு முந்தைய வாரமான இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமரைச்செல்வி எவிக்ட் ஆகி உள்ளார். நிரூப் தான் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நிரூப்பை செகண்ட் ஃபைனலிஸ்டாக மாற்றி தாமரையை வெளியேற்றி உள்ளனர்.
மூத்த மகன் ராஜு
தாமரை எவிக்ட் என கமல் அறிவித்த நிலையில், ராஜுவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்த தாமரை மூத்த மகன் என சொன்னது ராஜுவை நெகிழ வைத்து விட்டது. தாமரை எவிக்ட் என்கிற அறிவிப்பு ராஜுவுக்கு பயங்கர ஷாக்கிங்காக அமைந்தது அவரது முகம் தெளிவாக காட்டிக் கொடுத்து விட்டது.
கோடி கொடுத்தாலும்
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு பரிசே ரூ. 50 லட்சம் தான் என்கிற நிலையில், கோடி ரூபாய் கொடுத்தாலும் வெளியே போகமாட்டேன் என சொன்னா தாமரை என பிரியங்கா தாமரையின் வெளியேற்றத்தால் மிகவும் வாடி நின்றார். இன்னும் ஒரு வாரத்துக்கு வாய்க்கு ருசியா சமைத்துப் போட ஆளில்லை என்கிற கவலையும் பிரியங்காவுக்கு இருக்கும்.
தன்மானத் தலைவி
தாமரை எவிக்ட் என சொன்ன நிலையில், நிரூப் மீது தான் அமீரின் மொத்த கோபமும் இருந்தது. தண்ணீர் ஊற்றிக் கொண்டு ஃபைனலிஸ்ட் ஆக போகவே மாட்டேன்னு கெத்தா சொன்னாங்கா தாமரை என அமீர் பேசியதை கேட்ட ரசிகர்கள் தன்மானத் தலைவி என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.