Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
என்னாது.. நடிகர் சங்க தேர்தல் ரத்தா...? அப்படியே ஷாக்கான பாக்யராஜ்!!
Recommended Video
சென்னை: நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலை முன்னிட்டு அதற்கான பணிகளில் இரு அமைப்பினரும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் அதிக குளறுபடிகள் உள்ளதாக கூறி தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் இன்று உத்தரவிட்டது. மேலும், வாக்களிக்க தகுதியுள்ள வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டியுள்ளது என்றும் முதலில் வாக்காளர் பட்டியலை சரி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாண்டவர் அணி உடைய காரணமே விஷால்தான்.. அது மட்டுமா..? அப்பப்பா.. பொறிந்து தள்ளிய நடிகர் ஆரி!
எந்த ஆண்டு உறுப்பினர் பட்டியலை வைத்து தேர்தல் நடத்துவது என்பதை ஆய்வு செய்ய பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் ரத்து தொடர்பாக சுவாமி சங்கர்தாஸ் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என அவர் கூறினார். மேலும் தங்கள் அணியினருடன் ஆலோசித்து விட்டு இதுகுறித்து கருத்து தெரிவிப்பேன் எனவும் நடிகர் பாக்யராஜ் கூறினார்.
சங்க கட்டட கட்டுமான பணிகளை பாண்டவர் அணியினர் முடிக்காததால் தான், நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம் எனவும் பாக்யராஜ் கூறினார்.