Don't Miss!
- News வைகோவுக்கு தோள் கொடுத்த கணேசமூர்த்தி மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இரங்கல்!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Automobiles 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Education மே 2-வது வாரத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்-லைன் விண்ணப்ப தேதி அறிவிப்பு...!
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
என்னாது.. நடிகர் சங்க தேர்தல் ரத்தா...? அப்படியே ஷாக்கான பாக்யராஜ்!!
Recommended Video
சென்னை: நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலை முன்னிட்டு அதற்கான பணிகளில் இரு அமைப்பினரும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் அதிக குளறுபடிகள் உள்ளதாக கூறி தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் இன்று உத்தரவிட்டது. மேலும், வாக்களிக்க தகுதியுள்ள வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டியுள்ளது என்றும் முதலில் வாக்காளர் பட்டியலை சரி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாண்டவர் அணி உடைய காரணமே விஷால்தான்.. அது மட்டுமா..? அப்பப்பா.. பொறிந்து தள்ளிய நடிகர் ஆரி!
எந்த ஆண்டு உறுப்பினர் பட்டியலை வைத்து தேர்தல் நடத்துவது என்பதை ஆய்வு செய்ய பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தல் ரத்து தொடர்பாக சுவாமி சங்கர்தாஸ் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என அவர் கூறினார். மேலும் தங்கள் அணியினருடன் ஆலோசித்து விட்டு இதுகுறித்து கருத்து தெரிவிப்பேன் எனவும் நடிகர் பாக்யராஜ் கூறினார்.
சங்க கட்டட கட்டுமான பணிகளை பாண்டவர் அணியினர் முடிக்காததால் தான், நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம் எனவும் பாக்யராஜ் கூறினார்.