Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
திரைத் துறைக்கு இணையதளங்கள் கைகொடுக்க வேண்டும்!- பிரபல தயாரிப்பாளர்
திரைத்துறை மிக கடினமான சூழலில் உள்ள நிலையில், சிறு படங்களுக்கு இணையதளங்கள் கைகொடுக்க வேண்டும் என்றார் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார்.
தயாரிப்பாளர் சங்கம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சினிமா விளம்பரங்கள் குறித்து புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி படங்களை வாங்கும் தொலைக்காட்சிக்கு மட்டுமே விளம்பரங்கள், அதுவும் குறிப்பிட்ட தொகைக்குள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி படங்களை வாங்காத சேனல்களுக்கு விளம்பரங்கள் முற்றிலும் கிடையாது என்றும், திரைப்பட நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பில்லை என்றும் கூறியுள்ளது.
நாளை மறுநாள் முதல் இதனை அமலுக்குக் கொண்டு வரவிருக்கிறார்கள்.
இந்த சூழலில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார் (ஜேஎஸ்கே), தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் தருவதை விட இணையதளங்களுக்கு முக்கியத்துவம் தரப் போவதாகக் கூறினார்.
அவர் கூறுகையில், "இனி என் படங்களின் விளம்பரங்களை இணையதளங்கள் மூலமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். தயாரிப்பாளர் சங்கத்தின் வழிகாட்டுதல்படி இந்த விளம்பரங்களைத் தரவிருக்கிறேன்.
வரும் 24- ம் தேதி வெளியாகவிருக்கும் எனது படமான நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் இணையதளங்கள் மூலம்தான் உலகம் முழுக்க தெரிந்திருக்கிறது. இதனை நானே அனுபவத்தில் உணர்ந்தேன். அதனால் இந்தப் படத்திலிருந்து இணைய தளங்கள் மூலம் விளம்பரம் தரவிருக்கிறேன். இதன் மூலம் நல்ல பப்ளிசிட்டியும் கிடைக்கும், செலவும் குறையும்.
எனவே இனி என் போன்ற தயாரிப்பாளர்களுக்கு இணையதளங்கள் கைகொடுக்க வேண்டும்," என்றார்.