twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரைத் துறைக்கு இணையதளங்கள் கைகொடுக்க வேண்டும்!- பிரபல தயாரிப்பாளர்

    By Shankar
    |

    திரைத்துறை மிக கடினமான சூழலில் உள்ள நிலையில், சிறு படங்களுக்கு இணையதளங்கள் கைகொடுக்க வேண்டும் என்றார் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார்.

    தயாரிப்பாளர் சங்கம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சினிமா விளம்பரங்கள் குறித்து புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனி படங்களை வாங்கும் தொலைக்காட்சிக்கு மட்டுமே விளம்பரங்கள், அதுவும் குறிப்பிட்ட தொகைக்குள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி படங்களை வாங்காத சேனல்களுக்கு விளம்பரங்கள் முற்றிலும் கிடையாது என்றும், திரைப்பட நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பில்லை என்றும் கூறியுள்ளது.

    J Sathishkumar prefers websites instead of chennels

    நாளை மறுநாள் முதல் இதனை அமலுக்குக் கொண்டு வரவிருக்கிறார்கள்.

    இந்த சூழலில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரபல தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார் (ஜேஎஸ்கே), தொலைக்காட்சிக்கு விளம்பரங்கள் தருவதை விட இணையதளங்களுக்கு முக்கியத்துவம் தரப் போவதாகக் கூறினார்.

    அவர் கூறுகையில், "இனி என் படங்களின் விளம்பரங்களை இணையதளங்கள் மூலமாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். தயாரிப்பாளர் சங்கத்தின் வழிகாட்டுதல்படி இந்த விளம்பரங்களைத் தரவிருக்கிறேன்.

    வரும் 24- ம் தேதி வெளியாகவிருக்கும் எனது படமான நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படம் இணையதளங்கள் மூலம்தான் உலகம் முழுக்க தெரிந்திருக்கிறது. இதனை நானே அனுபவத்தில் உணர்ந்தேன். அதனால் இந்தப் படத்திலிருந்து இணைய தளங்கள் மூலம் விளம்பரம் தரவிருக்கிறேன். இதன் மூலம் நல்ல பப்ளிசிட்டியும் கிடைக்கும், செலவும் குறையும்.

    எனவே இனி என் போன்ற தயாரிப்பாளர்களுக்கு இணையதளங்கள் கைகொடுக்க வேண்டும்," என்றார்.

    English summary
    Leading Producer J Sathishkumar says that he would give his movie advertisements through websites instead of television channels.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X