Don't Miss!
- News பெரம்பலூர் தொகுதி: அமைச்சர் மகன் திமுக அருண் நேரு ஜெயிப்பாரா? அசரடிக்கும் அதிமுக பிரசாரம்!
- Sports IPL 2024 : இதுக்கா ஐபிஎல் ஆட வந்தோம்.. சோகத்தில் ஆர்சிபி வீரர்கள்.. இனி ஒரு தப்பு நடந்தாலும் சோலி முடிந்தது
- Finance அட, அமேசானில் இப்படியொரு சேவையா.. இது தெரியாமே போச்சே.. இனி பண பிரச்சனையே இருக்காது..!!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களுக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் இருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology புது ரூல்ஸ்.. லோயர் பெர்த்தில் செக்.. வயதானோருக்கு முன்னுரிமை.. மற்ற பயணிகள் முன்பதிவு.. ரயில்வே விளக்கம்!
- Automobiles டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
பர்த்டே வாழ்த்துக்கூட கூறவில்லை... அப்போ நிஜமாவே ‘அவங்க’ பிரிஞ்சுட்டாங்களா?
Recommended Video
சென்னை: தொடர் படத்தோல்வி காரணமாக அஞ்சலியும், ஜெய்யும் பிரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
எங்கேயும் எப்போதும் படத்தில் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்தனர் அஞ்சலியும், ஜெய்யும். அப்படத்தில் அவர்களது காதல் காட்சிகளும், கெமிஸ்ட்ரியும் பெரிதும் பேசப்பட்டது. அப்படத்தில் சேர்ந்து நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து வேறு சில படங்களில் சேர்ந்து நடித்த இருவரும், பின்னர் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்கத் தொடங்கினர். ஜோதிகாவின் மகளிர் மட்டும் பட ரிலீசுக்கு முன்னர், அப்படக்குழுவினரின் தோசை சவாலை ஏற்று, ஜெய் அஞ்சலிக்கு தோசை சுட்டுத் தருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இதை உறுதி செய்தன.
கசந்த காதல்:
இந்த சூழ்நிலையில், திடீரென இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஜெய்யுடன் எனக்கு காதலில்லை எனக் கூறி புதிய படங்களில் நடிக்கத் தொடங்கினார் அஞ்சலி. ஆனால், அஞ்சலி, ஜெய் இருவருக்கும் அடுத்தடுத்து சொல்லிக் கொள்ளும் வண்ணம் படங்கள் வெளியாகவில்லை.
பிறந்தநாள்:
இதனால், ஏற்பட்ட மனவேதனையில் இருவரும் நிரந்தரமாக பிரிய முடிவு செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதி செய்யும் வகையில், கடந்த 17ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலிக்கு, சமூகவலைதளப் பக்கத்தில் ஜெய் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
வாழ்த்து கூறவில்லை:
கடந்தாண்டு அஞ்சலி பிறந்ததினத்தை முன்னிட்டு தனது சமூகவலைதளப் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தார் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அஞ்சலி, ஜெய் காதல் முறிந்து விட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தொழிலில் கவனம்:
ஜெய் நடித்துள்ள ஜருகண்டி விரைவில் ரிலீசாக இருக்கிறது. அஞ்சலியும் அடுத்தடுத்து மூன்று திகில் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம், இருவரும் இனி தங்களது தொழிலில் மட்டும் அதிக கவனத்தை செலுத்துவது என முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.