Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
"இருந்துச்சு ஆனா இல்ல"... ஜெய், அஞ்சலி காதல் பற்றி நடிகை ராய் லட்சுமி!
தான் யாருக்கும் பயப்படமாட்டேன் என்றும் தனது வாழ்க்கையில் நிறைய முறை காதல் வந்துபோய் இருக்கிறது என்றும் நடிகை ராய் லட்சுமி கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் ஜெய், அஞ்சலி காதல் ஒரு படத்திலேயே முடிந்துவிட்டதாக, நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.
ஜெய், ராய் லட்சுமி, கேதரின் தெரசா, வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள நீயா-2 திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகை ராய் லட்சுமி, தன்னுடைய காதல் அனுபவம் மற்றும் நடிகர் ஜெய், அஞ்சலி காதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.
'இவ்ளோ பெரிய ஹீல்ஸ்-ஆ போட்டுட்டு வர்றது'.. ராய் லட்சுமியால் சங்கடத்தில் நெளிந்த ஜெய்!
எடை குறைத்தேன்
இதுகுறித்து அவர் கூறியதாவது, " நான் சினிமாவுக்கு வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. இந்தியில் ஜூலி படத்தில் நடிக்க எடையை குறைக்கும்படி இயக்குனர் சொன்னதால் பால், சப்பாத்தி சாப்பிடுவதை நிறுத்தி அரிசி உணவுகளையும், உருளை கிழங்கையும் சாப்பிட்டு உடற்பயிற்சிகள் செய்து 75 கிலோவாக இருந்த எடையை 59 கிலோவாக குறைத்தேன்.
நிறைய காதல்
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். எனது வாழ்க்கையில் நிறைய முறை காதல் வந்துபோய் இருக்கிறது. நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். நீயா-2 படம் சிறப்பாக வந்துள்ளது. இயக்குனர் எல்.சுரேஷ் கடுமையாக உழைத்து இந்த படத்தை எடுத்துள்ளார். நிறைய கிராபிக்ஸ் காட்சிகளும் இருக்கும்.
ஜெய் - அஞ்சலி காதல்
இதில் நடிக்கும்போது எனக்கும் கேதரின் தெரசா, வரலட்சுமி ஆகியோருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அடுத்து சின்ட்ரல்லா, மிருதன்-2 கன்னடத்தில் ஜான்சி உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறேன். ஜெய், அஞ்சலி இருவரும் எனக்கு நண்பர்கள். அவர்கள் காதல் ஒரு படத்திலேயே முடிந்துவிட்டது.
தவறாகிப்போன மீ டூ
‘மீ டூ' இயக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால் போகப்போக அதை தவறாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதனால் அதன்மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது" என ராய் லட்சுமி கூறினார்.
காதல் உறுதி
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இருக்கு ஆனா இல்ல என்ற ரேஞ்சுக்கு அதிகம் பேசப்பட்டு வருவது ஜெய் அஞ்சலி காதல் கதை தான். தாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என அவர்கள் பலமுறை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ராய் லட்சுமியின் இந்த பேட்டி, அவர்களின் காதலை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது.