யப்பா... ஜெய், அஞ்சலி... இது உலக மகா நடிப்புடா சாமி...!
ஜெய்யும் அஞ்சலியும் ட்விட்டரில் பேசிக்கொள்வதைப் பார்த்தவர்கள் தான் இப்படி சொல்கிறார்கள்.
ஜெய், அஞ்சலி கிசுகிசுவுக்கு ஆயுள் அதிகம். சுமார் 10 ஆண்டுகளாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் அஞ்சலி காணாமல் போய் சித்தியை பிரிந்து ரீ எண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். அதில் ஜெய்யுடன் இணையும் படமும் ஒன்று.

மீண்டும் காதலிக்க ஆரம்பித்ததாக சொல்லப்பட்ட ஜெய்யும் அஞ்சலியும் ஒரே வீட்டில் இருந்துகொண்டு தோசை ஊற்றி ரொமான்ஸ் செய்து அதையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டு உலகத்துக்கு எதையோ சொல்ல வந்தார்கள்.
இந்நிலையில் திடீரென்று அவர்கள் நடித்த படத்தைக் குறிப்பிட்டு 'உங்க கூட நடிச்சது சந்தோஷம். உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். எப்ப நம்ம ரெண்டு பேரையும் ஸ்க்ரீன்ல பார்க்கிறதுன்னு ஆர்வமா இருக்கேன். ப்லா..ப்லா...ப்லா...' என்று ட்விட்டி இருக்கிறார்கள்.
ஒரே வீட்டில் வசித்துக்கொண்டே எப்படி ட்விட் என்கிறீர்களா? எல்லாம் படத்தோட பப்ளிசிட்டிக்காகத்தான்... தலைப்பை திரும்ப படிச்சுக்குங்க...!


Click it and Unblock the Notifications











