ஜெய் பீம் சிறுமி ‘அல்லி’ செய்த நெகிழ்ச்சியான காரியம்…வைரலாகும் வீடியோ !
சென்னை : ஜெய் பீம் படத்தில் அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானத் திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார். சூர்யாவின் 39வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் , மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இருளர் பழங்குடியினத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது ஜெய் பீம் திரைப்படம். சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்த இந்தப் படம், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பலரின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் குவித்தது. ஆஸ்கர் வரை சென்ற ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கரின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் ஜெய் பீம் படத்தின் பெயர் தேர்வாகவில்லை. இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படத்தில் ராஜாகண்ணு, செங்கணியின் மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சிறுமி ஜோஷிகா. இவர் இன்று தனது பிறந்த நாளை, ஆதரவின்றி சாலையில் வாசிக்கும் பெண்ணுக்கு சாக்லேட் வழங்கி கொண்டாடினார். மேலும், அந்த பெண்ணுடன் அமர்ந்து நல்ல விசாரித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல லைக்குகளை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











