Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜெய் பீம் சிறுமி ‘அல்லி’ செய்த நெகிழ்ச்சியான காரியம்…வைரலாகும் வீடியோ !
சென்னை : ஜெய் பீம் படத்தில் அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானத் திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார். சூர்யாவின் 39வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் , மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இருளர் பழங்குடியினத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது ஜெய் பீம் திரைப்படம். சூர்யா தனது 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்த இந்தப் படம், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பலரின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் குவித்தது. ஆஸ்கர் வரை சென்ற ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கரின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் ஜெய் பீம் படத்தின் பெயர் தேர்வாகவில்லை. இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஜெய்பீம் திரைப்படத்தில் ராஜாகண்ணு, செங்கணியின் மகளாக அல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சிறுமி ஜோஷிகா. இவர் இன்று தனது பிறந்த நாளை, ஆதரவின்றி சாலையில் வாசிக்கும் பெண்ணுக்கு சாக்லேட் வழங்கி கொண்டாடினார். மேலும், அந்த பெண்ணுடன் அமர்ந்து நல்ல விசாரித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல லைக்குகளை பெற்று வருகிறது.