Don't Miss!
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மேலும் இருவிருதுகளை தட்டி தூக்கிய ‘ஜெய்பீம்‘… குவியும் வாழ்த்து !
டெல்லி : நடிகர் சூர்யாவின் 'ஜெய்பீம் திரைப்படத்தை கௌரவிக்கும் வகையில் மேலும் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் என பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம்.
அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா ரசிகர்கள் எனப் பலரும் ஜெய் பீம் படத்தைப் பாராட்டியிருந்தனர். மேலும் சர்வதேச அரங்கில் பல விருதுகளை வாங்கி குவித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கர் தகுதி பட்டியல் வரை சென்றது.
தல–தளபதி போட்டோ ப்ளீஸ்...விஜய் –அஜித் சந்திப்பு நடக்குமா... உச்சகட்ட ஆர்வத்தில் ரசிகர்கள்
ஜெய்பீம்
இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பிறந்த தினமான ஏப்ரல் 30-ம் தேதியை முன்னிட்டு, வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதன்படி12வது தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் ஜெய்பீம் திரைப்படம் இருவிருதுகளை பெற்றுள்ளது.
உண்மை சம்பவம்
கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான படம் ஜெய்பீம். இப்படத்தில் இருளர்களின் வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், காவலர்களின் காட்டுமிரட்டித்தனத்தின் உச்சம் குறித்தும் தோலுரித்து காட்டப்பட்டது. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
Recommended Video
இயல்பான நடிப்பு
வழக்கறிஞர் சந்துரு ரோலில் சூர்யா அழகாக இயல்பாக நடித்திருந்தார். ராசாக்கண்ணுவாக மணிகண்டன், செங்கேணி கதாபாத்திரத்தில் லிஜோமோல் நடித்திருந்தார்கள். இவர்கள் இருவரும் நடித்திருந்தார்கள் என்பதைவிட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவர்கள் இருவரின் கதாபாத்திரம் இயல்பாக இருந்தது.
இருவிருதுகள்
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற 12வது தாதாசாகேப் சர்வதேச திரைப்பட விழாவில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதினைப் பெற்றது. இப்படத்தில் ராசகண்ணுவாக நடித்த மணிகண்டன் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார். பலரும் தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
கில்லி த்ரிஷா ரோலில் நான் நடிக்க வேண்டியது..லவ் பண்ணிட்டு இருந்ததால் மிஸ்ஸாகிடுச்சு..கிரண் வேதனை!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!