Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நஸ்ரியாவுக்கும், ஜெய்க்கும் லவ்வோ லவ்வாம்!
சென்னை: நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா நஸீமுக்கும், ஜெய்க்கும் காதல் தீ பற்றிக் கொண்டுள்ளதாக பேச்சாக கிடக்கிறது.
ஜெய் பற்றி காதல் செய்தி வருவது இது ஒன்றும் முதல் முறை அன்று. எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது அவருக்கும், அஞ்சலிக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியை கேட்ட அஞ்சலி டென்ஷனாகி கூறுகையில், இந்த ஜெய் வேண்டும் என்றே செய்தியைப் பரப்புகிறார். அவருடன் காதல் எல்லாம் இல்லை. இனி அவருடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன் என்றார்.
அஞ்சலி மாயமானபோது ஜெய்க்கு அவஸ்தை
அஞ்சலி திடீர் என்று மாயமானபோது போலீசாரின் சந்தேக பார்வை ஜெய் மீது தான் விழுந்தது. நல்லவேளையாக அஞ்சலி அவராக திரும்பி வந்தார். அஞ்சலி திரும்பி வந்த சந்தோஷத்தை ஜெய் பார்ட்டி கொடுத்து கொண்டாடினார்.
நஸ்ரியா நஸீம்
திருமணம் எனும் நிக்கா படத்தில் ஜெய் மற்றும் நேரம் படம் நாயகி நஸ்ரியா நஸீம் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படப்பிடிப்பின்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.
ஜோடியாக ஊர்சுற்றல்
ஜெய்யும், நஸ்ரியாவும் ஜோடியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்களாம்.
தனுஷ் படக்குழு எரிச்சல்
நஸ்ரியா தனுஷ் ஜோடியாக நையாண்டி படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கெல்லாம் ஜெய் வந்து கேரவனுக்குள் நஸ்ரியாவுடன் மணிக்கணக்கில் கடலை போடுகிறாராம். இதனால் படப்பிடிப்பு பாதிக்கிறதாம். என்னடா இவங்க என்று படக்குழுவினர் எரிச்சல் அடைகிறார்களாம்.
ஜெய் வந்தாச்சா, இனி அவ்ளோ தான்
ஜெய் வந்தால் படப்பிடிப்பு நடந்த மாதிரி தான் என்று நையாண்டி படக்குழுவினர் அலுத்துக் கொள்கிறார்களாம்.