Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
‘நம்புங்க பாஸ்.. சத்தியமா நாங்க காதலிக்கவேயில்ல..’ நடிகையுடனான கிசுகிசு பற்றி பிரபல நடிகர் விளக்கம்
அஞ்சலியை காதலிக்கவில்லை என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகை அஞ்சலியுடன் காதலில் இல்லை என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.
எங்கேயும் எப்போதும், பலூன் உட்பட சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர் ஜெய் - அஞ்சலி. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உண்டானதாக கூறப்பட்டது. இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும், அதோடு விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் இந்த தகவலை ஆரம்பம் முதலே இருவரும் மறுத்து வருகின்றனர். இருந்த போதும் தொடர்ந்து இது போன்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் தான் உள்ளன.
கபாலிக்குப் பிறகு வானில் பறக்க வரும் தர்பார்.. ரஜினி ரசிகர்கள் குஷி
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி மீண்டும் ஜெய் பேசியுள்ளார். அதில் அவர், 'எனக்கே தெரியாத விஷயங்களை மக்கள் கூறுகிறார்கள். கல்யாணம் சந்தோஷமான விஷயம், அது முடிவானால் கண்டிப்பாக மக்களிடம் தெரிவிப்பேன்' எனத் தெரிவித்துள்ளார்.
அதோடு, அஞ்சலியுடன் காதல் எனப் பரவும் செய்தி குறித்து பேசுகையில், 'அஞ்சலியுடன் காதலில் இல்லை என்றும் அவரை வருங்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் இல்லை' என்றும் ஜெய் கூறியுள்ளார்.
மேலும் ஜெய் தனது பெயரை அஜீஸ் ஜெய் என மாற்றிக் கொள்ள இருப்பதாகவும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜெய் அடுத்ததாக எண்ணித் துணிக என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இது அவரது 27வது படம் ஆகும்.