ஜெயிலர் 2 எப்போது ரிலீஸ் தெரியுமா?.. வசூல் மழை பொழியுமா?.. நிலவரம் என்ன?
சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இதன் முதல் பாகம் மெகா ஹிட்டடித்ததால் இந்தப் பாகத்தின் மீதும் எக்கச்சக்க ஹைப் எகிறியிருக்கிறது. இதில் விஜய் சேதுபதில், எஸ்.ஜே.சூர்யா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இந்நிலையில் படம் இப்போதைக்கு என்ன நிலைமையில் இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்கள் தோல்வியடைந்தபோது; பாபா தோல்வியில் எல்லோரும் என்ன பேசினார்களோ அதையேதான் பேசினார்கள். ஆனால் ரஜினியோ வழக்கம்போல் அமைதியாகவே இருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க கமிட்டானார். ஏற்கனவே இவர் தோல்வி முகத்தில் இருந்தது மாதிரியே பீஸ்ட் படத்தை கொடுத்து நெல்சனும் அதே முகத்தில்தான் இருந்தார்.

பரவிய வதந்திகள்: அதன் காரணமாக ஜெயிலர் படமும் தோல்விதான் என்று அடித்து சொன்னார்கள். அதுமட்டுமின்றி நெல்சன் மீது நம்பிக்கை இல்லாமல் கே.எஸ்.ரவிக்குமாரை கதை விவாதத்தில் பங்கேற்க வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் அனைவரும் சொன்னார்கள். ஆனால் அதெல்லாம் வெறும் வதந்திதான் என்பது பின்நாட்களில் உறுதியானது. நெல்சனும் தன் பொறுப்பை உணர்ந்து படத்தை இயக்கினர்.
மெகா ஹிட்டான படம்: ரஜினியும், நெல்சனும் எதிர்பார்த்த மாதிரியே படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூலித்தது.சொல்லப்போனால் அவர்கள் இரண்டு பேருக்குமே அந்தப் படம் புதிய அத்தியாயத்தை தொடங்க வைத்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி, அனிருத், நெல்சன் திலீப்குமார் ஆகியோருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பில் சொகுசு கார்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் 2 கூட்டணி: முதல் பாகத்திலேயே இரண்டாவது பாகத்துக்கான லீடை கொடுத்திருந்ததால்; இரண்டாவது பாகம் உருவாகியிருக்கிறது. ஷாருக்கான் எல்லாம் இதில் நடிக்கிறார் என கூறப்பட்டது. அவரோ, கூலி படத்தில் நடித்து அமீர் கான் காலியானது போல்; தானும் ஆகிவிடக்கூடாது என்று சுதாரித்து விலகிவிட்டார் என்றும் தகவல்கள் பரவின. அதேசமயம் வித்யா பாலன், சந்தானம் உள்ளிட்டோரும் நடிக்கிறார்களாம்.
ஜெயிலர் 2 ரிலீஸ் எப்போது?: அவர்கள் மட்டுமின்றி விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், மோகன் லால், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டாலும்; சில பேட்ச் வேலைகளுக்காக ரீ ஷூட் செய்ய இயக்குநர் பிளான் செய்திருப்பதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் அப்படியெல்லாம் ரீ ஷூட் செய்யும் எண்ணம் நெல்சனுக்கு இல்லை; செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் திரைத்துறையிலிருந்து தகவல்கள் வருகின்றன.


Click it and Unblock the Notifications
