Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஆரியின் வாக்குகள் குறைத்து காண்பிக்கப்பட உள்ளதா? வாய்ப்புகள் உண்டு.. பிரபல இசையமைப்பாளர் பரபர!
சென்னை: பிக்பாஸ் ஃபைனலில் ஆரி பெற்ற வாக்குகள் குறைத்து காண்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.
நெக்ஸ்ட் சிஎம்.. நெக்ஸ்ட் கர்ணன்.. ரம்யாவே பரவாயில்லை போல.. அவங்க அக்கா வேற லெவல்.. முத்திப்போச்சு !
கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்று நடைபெறுகிறது.
இதில் ஆரிதான் வின்னர் என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது.
டாப்பில் ஆரி
இதேபோல் ஆரி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆரிதான் 27 கோடி வாக்குகள் பெற்று டாப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆரியின் வாக்குகள் குறித்து..
மேலும் ஆரி பெற்ற வாக்குகளை குறைத்து காட்ட விஜய் டிவி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
புதுயுகத் தலைவன்
அவர் பதிவிட்டிருப்பதாவது, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்ற புதுயுகத் தலைவன் ஆரிக்கு 24+ கோடி ஓட்டுகள் வந்ததாகவும், அடுத்த இடத்திற்கு 4+ கோடி ஓட்டுகள் வந்ததாகவும், ஆனால் இந்த அகன்ற வாக்கு வித்தியாசம் மறைக்கப்பட்டு குறைத்து காண்பிக்கப்படப் போகிறது என்றும் பல தளங்களில் தகவல்கள் வெளியாகின்றன, இது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்த வந்த தகவல் என்று!
வாய்ப்புகள் உண்டு
எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், உண்மையாக இருக்க எல்லா வாய்ப்புகளும் உண்டு, உலகமெங்கும் அந்த நேர்மையின் சின்னத்துக்கு இருந்த நம்பமுடியாத ஆதரவைப் பார்க்கும்போது!
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை.. இவ்வாறு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.