Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சினிமா வாய்ப்பு இல்லேன்னா என்ன.. இது இருக்கே - அசராத ஜனனி ஐயர்!
Recommended Video
சென்னை : நடிகை ஜனனி ஐயர், பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா நடித்த 'அவன் இவன்' படத்தில் அறிமுகமான போது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். 'திரையுலகில், இவருக்கு மிகப் பெரிய இடம் காத்திருக்கிறது' என திரையுலகினரும் ரசிகர்களும் பாராட்டினர்.
அதைத் தொடர்ந்து தமிழ், மலையாள படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 'தெகிடி' படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிய வரவேற்பை பெறாததால், அப்படியே சினிமா வாய்ப்புகளும் குறையத் தொடங்கி விட்டன.
தற்போது, தமிழில், தொலைக்காட்சி என்ற ஒரே ஒரு படம் மட்டுமே, ஜனனியின் கைவசம் உள்ளது. நடிக்க வருவதற்கு முன், மாடலிங் துறையில் இருந்தார் ஜனனி ஐயர். 150-க்கும் மேற்பட்ட, தொலைக்காட்சி விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளதால், மீண்டும் மாடலிங் துறையில் கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் கூட, சென்னையில் நடந்த ஒரு மாடலிங் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். சினிமா இல்லையென்றாலும் மாடலிங்கில் கலக்குவேன் எனக் கூறுகிறாராம் ஜனனி ஐயர்.