ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸில் மனதை அள்ளும் ஜனனி ஐயர்.. ஊர் கண்ணே பட்டுடும் போல இருக்கே!
சென்னை : தனது நேர்த்தியான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் நடிகை ஜனனி ஐயர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்ற இவர் இப்பொழுது அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் பரத்துடன் இணைந்து நடித்து வருகிறார்.
போதை ஏற்றும் கண்களால் ரசிகர்களை வசீகரம் செய்யும் ஜனனி ஐயர் இப்பொழுது ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸில் உள்ள வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார்.

மீண்டும் அசோக் செல்வன்
இயக்குனர் பாலாவின் அவன் இவன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பலராலும் அறியப்பட்ட நடிகை ஜனனி ஐயர் இப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். 2014-ல் வெளியான தெகிடி மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து மீண்டும் அசோக் செல்வன் உடன் இணைந்து வேழம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

முன்னறிவான்
இதைத்தொடர்ந்து மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்து வரும் ஜனனி இப்பொழுது பரத்துக்கு ஜோடியாக யாக்கை திரி மற்றும் முன்னறிவான் என இரண்டு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். நடன இயக்குனராகவும் நடிகராகவும் உள்ள பிரபுதேவா இயக்கத்தில் வித்தியாசமான திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள பஹீராவில் 7 கதாநாயகிகள் ஒருவராக ஜனனி ஐயர் நடித்துள்ளார்.
Recommended Video

கவர்ச்சி காட்டாமல்
இதுவரை கவர்ச்சி எதுவும் காட்டாமல் அனைவரும் ரசிக்கும் வகையில் திரையில் வலம்வரும் ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக விளையாடி வந்த ஜனனி இறுதி சுற்று வரை சென்று பின் வெளியேறிவிட்டார்.

ராஜ ராஜ சோழன் நான்
போதையேற்றும் கண்களால் வசீகரம் செய்யும் இவரை ஏற்கனவே ரசிகர்கள் ஆராதித்து வரும் நிலையில் இப்பொழுது ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸில் தளும்ப தளும்ப சேலையில் மொட்டை மாடியில் சுற்றி வர. ராஜ ராஜ சோழன் நான் என்ற பாடல் பேக்ரவுண்டில் ஒலிக்க பார்க்க பார்க்க திகட்டாத இந்த க்யூட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆஹா ஓஹோ என வர்ணித்து வரும் நிலையில் ஊர் கண்ணே பட்டுடும் போல இருக்கே உங்க வீட்டுல சுத்தி போட சொல்லுங்க எனவும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











