Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹீரோவை தன் மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவியின் மகள்: வைரல் புகைப்படம்
Recommended Video
மும்பை: ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தன் பட ஹீரோவை மடியில் அமர வைத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் என்ற படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் ஹீரோவாக நடிக்கிறார்.
கரண் ஜோஹார் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
இஷான்
படப்பிடிப்பு தளத்தில் ஜான்வி இஷான் கட்டாரை தனது மடியில் அமர வைத்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. அவர் படத்திற்காக இஷானை தனது மடியில் அமர வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தகவல்
ஜான்வி மடியில் அமர்ந்து இஷான் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஜான்விக்கு ஏற்கனவே காதலன் உள்ளார்.
உதவி
ஷூட்டிங் ஸ்பாட்டில் இஷான் தனது செல்போனை பார்த்துக் கொண்டிருக்க ஜான்வியோ அவரின் தலைமுடியை சரிசெய்யும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
மரணம்
ஸ்ரீதேவியின் மரணத்தால் சோகத்தில் இருக்கும் ஜான்வி படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது கவலை மறக்க முயன்று வருகிறார். படக்குழுவும் அவரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறது.
அழுகை
ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் தனது நண்பர் ஒருவரை சந்தித்தபோது தாயை நினைத்து அழத் துவங்கிவிட்டார். அந்த நண்பர் அவருக்கு ஆறுதல் கூறியபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.