Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
நண்பர்களுடன் முகத்தை மூடியபடி ஊர் சுற்றிய பிரபல நடிகை.. ஆனாலும் நம்ம மக்கள் கண்டுபிடிச்சுட்டாங்களே!
மும்பை: முகத்தை மூடிக் கொண்டு ஊர் சுற்றிய போதும் நடிகை ஜான்வி கபூரை ரசிகர்கள் சரியாக அடையாளம் கண்டு கொண்டுள்ளனர்.
பொதுவாகவே பிரபலங்கள் என்றால் புகழ் இருப்பது போலவே, சில சிரமங்களும் இருக்கத்தான் செய்யும். அதில் ஒன்று தான் பொது இடங்களுக்கு சுதந்திரமாக வர முடியாதது. அதிலும் சினிமா நட்சத்திரங்களுக்கு இந்தப் பிரச்சினை ரொம்பவே அதிகம்.
வெளியிடங்களில் அவர்களைப் பார்க்கும் போது ரசிகர்கள் ஆட்டோகிராப், செல்பி என மொய்க்கத் தொடங்கி விடுவர். இதனால் அவர்களது தனிமை பாதிக்கப்பட்டு விடும்.
இந்த சிரமங்களைத் தவிர்ப்பதற்காகவே சில பிரபலங்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகத்தை மூடிக் கொண்டோ அல்லது முகத்தை மறைப்பது போன்ற தொப்பி அணிந்து கொண்டோ செல்வது வழக்கம்.
அந்தவகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தனது நண்பர்களுடன் வாரணாசியில் ஊரை சுற்றிப் பார்த்துள்ளார். அப்போது தன் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு அவர் இருந்துள்ளார். ஆனாலும் அவரை அடையாளம் கண்டுகொண்டனர் ரசிகர்கள்.
இப்படியே போயிட்டிருந்தா எப்படி? 4 வது பாகத்துக்கும் சல்மான் ரெடியாம்...
தற்போது அவர் முகத்தை மூடியபடி மார்க்கெட் ஒன்றில் செல்லும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
ஏற்கனவே அவர் ஜிம்முக்கு செல்லும் புகைப்படங்கள் முதற்கொண்டு இணையத்தில் வெளியாவது வழக்கம். அந்தளவிற்கு ரசிகர்கள் அவரைப் பின் தொடர்ந்து வருகின்றனர். சமயங்களில் அவர் ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்டதும் உண்டு. அப்படி இருக்கையில் தைரியமாக இப்படி முகத்தை மூடிக் கொண்டு மார்க்கெட்டிற்கு சென்றிருக்கிறாரே என ஜான்வியின் செயலைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.