Don't Miss!
- Sports ஐபிஎல்- சாதனை பட்டியலில் ருதுராஜ்.. ஒவ்வொரு அணி கேப்டனும் அடிச்ச அதிகபட்ச ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?
- Finance தண்ணீர் பஞ்சத்தை விடுங்க.. Apple கடை வருதாம்ல்ல.. க்யூகட்டி நிக்க வேண்டியது தான்..!!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
மும்பை: விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டதை அடுத்து, கோலமாவு கோகிலா படத்தின் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டது.
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் இப்போது நடிக்கும் படம், குட் லக் ஜெர்ரி. அவர் தற்போது, குட்லக் ஜெர்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நல்லா கேட்டுக்கோங்க.. அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்!
இது தமிழில் நயன்தாரா நடித்து வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் இந்தி ரீமேக்.
சித்தார்த் சென்குப்தா
இதை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தயாரித்து வருகிறார். சித்தார்த் சென்குப்தா இயக்குகிறார். இதில் நயன்தாரா கேரக்டரில் ஜான்வி கபூர் நடிக்க, பஞ்சாப்பில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. பாஸி பதானா நகரில் ஷூட்டிங் நடந்த போது, படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு வந்த விவசாயிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தி திரையுலகம்
அதிகமான விவசாயிகள் திடீரென அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை இந்தி திரையுலகினர் கண்டுகொள்ளவில்லை.
ஜான்வி கபூர்
விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப வேண்டும் என்று கூறினர். அவர்களிடம் பேசிய இயக்குனர் சென்குப்தா, விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகை ஜான்வி கபூர் அறிக்கை வெளியிடுவார் என்று கூறி சமாதானம் செய்து வைத்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
நாட்டின் இதயம்
இதையடுத்து நடிகை ஜான்வி கபூர், தனது இன்ஸ்டா ஸ்டோரியில், விவசாயிகளுக்கு ஆதரவாகக் கருத்து ஒன்றைப் பதிவிட்டார். அதில், விவசாயம் தான் நம் நாட்டின் இதயம். நமது தேசத்துக்கு உணவளிக்கும் அவர்கள் பங்கை நான் அங்கீகரிக்கிறேன், மதிக்கிறேன். அவர்கள் ஆதாயமடையும் வகையிலான தீர்மானம் அவர்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியிருந்தார் ஜான்வி.
திரும்பிச் செல்
இந்நிலையில் இந்த படக்குழுவினர் பாட்டியாலாவில் உள்ள பூபிந்தரா சாலையில் படப்பிடிப்பில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென்று கூடிய விவசாயிகள் படக்குழுவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜான்வி கபூரே திரும்பிச் செல் என்று கோஷமிட்டனர்.
படப்பிடிப்பு நிறுத்தம்
கூட்டம் அதிகமானதால், படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு ஜான்வி கபூர் உட்பட படக்குழுவினர் தங்கியிருந்த ஓட்டலுக்கு அனுப்பப்பட்டனர். அந்த ஓட்டல் முன்பு விவசாயிகள் தர்ணாவில் நடத்தினர். பின்னர் போலீசார் அங்கு வந்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.