கோட்டு போட்ட மயிலு... கிறங்கடிக்கும் பார்வையுடன் ஜான்வி கபூரின் புதிய போட்டோஷுட்
மும்பை : நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் சிறப்பான நடிகையாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார்.
பல முக்கிய படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ஜான்வி கபூர். அவ்வப்போது புதிய போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது வெள்ளை நிற உடையில் அணிந்தும் அணியாமலும் உள்ள கோட்டுடன் அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் நெஞ்சை அள்ளுகின்றன.

சிறந்த நடிகை
நடிகை ஸ்ரீதேவி கோலிவுட்டில் அறிமுகமாகி சிறப்பான பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக தென்னிந்திய மொழிகளில் வலம்வந்தவர். பின்னர் பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கும் தன்னை சிறந்த நடிகையாக நிரூபித்தார். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

பாலிவுட்டில் மூத்த மகள்
ஒரு கட்டத்தில் அவர் திருமணமாகி, மும்பையில் செட்டில் ஆனார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஸ்ரீதேவி மறைந்த நிலையில், தற்போது அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். பல சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.

அதிக ரசிகர்கள்
இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களிலும் பிசியாக உள்ளார். அவ்வப்போது புதிய கான்செப்ட்களில் புதிய போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவற்றை பதிவிட்டு வருகிறார். அவரது புகைப்படங்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

அதிக லைக்ஸ்கள்
தற்போது வெள்ளை நிற உள்ளாடையின் மேல் கோட்டை அணிந்தும் அணியாமலும் தன்னுடைய காலழகை வெளிப்படுத்தி அவர் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். படம் பகிரப்பட்ட 4 மணிநேரங்களில் 5 லட்சம் லைக்ஸ்களை இந்த புகைப்படங்கள் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications











